December 6, 2025, 2:37 AM
26 C
Chennai

குமரி பகுதியின் சிவாலய ஓட்டம்! 12 ஆலயங்களில் சிவாலய சிறப்பு பூஜைகள்!

sivalaya ottam - 2025

சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி 12 சிவாலயங்களிலும் நடந்த சிவராத்திரி சிறப்பு பூஜையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரி விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களுக்கும் ஓடிச் சென்று தரிசனம் செய்யும் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த சிவாலய ஓட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து நேற்று முன்தினம் மாலை சிவாலய ஓட்டம் தொடங்கியது. இதில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் மங்காடு தாமிர பரணி ஆற்றில் புனித நீராடி திருமலை மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் காவி உடையணிந்து கைகளில் விசிறி ஏந்தியபடி சென்றனர்.

sivalaya ottam1 - 2025

நேற்று அதிகாலையில் இருந்து குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, மதுரை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் கார், வேன், இருசக்கர வாகனங்களில் வந்தனர்.

அவர்கள் முன்சிறை மகாதேவர் கோவிலில் தரிசனம் செய்து அங்கிருந்து திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்றிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கொடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிகோடு ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்த 11 கோவில்களிலும் பக்தர்களுக்கு விபூதி பிரசாதமாக வழங்கப்பட்டது. இறுதியாக 12-வது சிவாலயமான திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் தரிசனம் செய்து சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்தனர். அப்போது பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்பட்டது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த 12 கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அந்தந்த ஊர்களில் உள்ள சிவ பக்தர்கள் சங்கத்தினர் குடிநீர், சுகாதார வசதி, அன்னதானம் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும், இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு வழி நெடுகிலும் நீர்மோர், சர்பத், தர்பூசணி பழம் போன்றவை வழங்கப்பட்டன.

சிவாலய ஓட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிவராத்திரியை முன்னிட்டு இந்த 12 சிவாலயங்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் இன்று(செவ்வாய்க்கிழமை) பகல் 11 மணி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும். இந்த கோவில்களில் சிவராத்திரியையொட்டி 4 கால யாம பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

sivalaya ottam2 - 2025

சிவாலய ஓட்டத்தையொட்டி மார்த்தாண்டத்தில் இருந்து தேங்காப்பட்டணம் செல்லும் வாகனங்கள் காப்புக்காடு சந்திப்பில் இருந்து ஐரேனிபுரம், சடையன்குழி, கைசூண்டி, புதுக்கடை வழியாக திருப்பிவிடப்பட்டன.

இதேபோல் முன்சிறையில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் வாகனங்கள் முட்டக்குளம், பண்டாரபரம்பு, மாராயபுரம், காப்புக்காடு வழியாக திருப்பிவிடப்பட்டன. இருப்பினும் அதிகாலையில் ஒரே நேரத்தில் பக்தர்கள் திரண்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories