February 23, 2026, 4:26 PM
31.7 C
Chennai

திருப்பாற்கடல் – மஹா பெரியவா விளக்கம்!

Thiruparkadal - 2026

புகழ்பெற்ற கவிஞரான திரு கண்ணதாசன் ஒருமுறை காஞ்சிபுரம் பரமாச்சார்யாரை சந்தித்தார். வழக்கம்போல ஆன்மீக விசாரங்கள் நடைபெற்றது. கண்ணதாசன் ஆன்மீகப் பாதையில் திரும்பும் முன் நாஸ்திகக் கொள்கையாளராகவும், மதங்களை விமர்சித்துக் கட்டுரை எழுதுபவராகவும் இருந்தார். ஆனால் பரமாச்சார்யார் அவரை தேவையற்ற பகுத்தறிவுவாத்த்தில் இருந்து வெளிக்கொணர்ந்து, மெது மெதுவே ஆன்மீக ஞானம் பெற செய்தார்.

ஆனால் அடிப்படையில் விமர்சனம் செய்யும் போக்கானது தொடரவே செய்த்து அவரிடம்.

கண்ணதாசன் கேட்டார், “பால் வெண்மை நிறமானது. ஆனால் பாற்கடல் ஏன் மேகவர்ணமாய் காட்டப்படுகிறது? இறைவனான ஸ்ரீவிஷ்ணுவின் நிறம், பாற்கடலில் கலந்து விட்டதா?”.

ஆச்சார்யார் சிரித்துக் கொண்டே உனக்கான பதில் மதியம் கிடைக்கும் என்று கூறி கண்ணதாசனை குழப்பத்தில் ஆழ்த்தினார்.

அன்றைய தினம் மதியத்தில் உம்மிடியார் மடத்திற்கு வந்தார். கண்ணதாசனும் உம்மிடியாரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்குள் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். பின்னர், உம்மிடியார் ஒரு பச்சை மரகதக்கல்லை ஆச்சார்யாரின் பாதத்தில் ஏற்றுகொள்ள வேண்டிச் சமர்ப்பித்தார்.

கல்லுக்கும் மணிக்கும் பாகுபாடு பார்க்காத ஆச்சார்யார், காரியதரிசியை அழைத்து பாத்திரத்தில் பால் கொண்டு வரப் பணித்தார். பாலில் மரகதத்தை முக்கினார் ஆச்சார்யார்.

நகைத் தொழிலில், கல்லின் தரத்தைச் சோதிக்கப் படும் முறை அது. உம்மிடியாரோ திகைத்துப் போனார்.

தன் குணத்தின் பேரில் சந்தேகமா இல்லை மரகதத்தின் பெயரில் சந்தேகமா என்று உம்மிடியார் குழம்பிப் போனார். ஆச்சார்யார் பொறுமையாக கண்ணதாசனை அழைத்துப் பாலைக் காட்டினார். வெளிர்பச்சை வர்ணத்தில் பால் மாறிப்போய் இருந்தது.

வாயடைத்துப் போன கண்ணதாசனிடம் ஆச்சார்யர் விளக்கலானார். மரகதத்தால் பால் எப்படி பச்சை வர்ணம் பெற்றதோ அதைப் போலவே ஸ்ரீமந் நாராயணனை ஏந்திக் கொண்டிருக்கும் பாற்கடலும், அவனது வர்ணத்தைப் பெறுகிறது. அதனாலேயே மேகவர்ணமாய் இருக்கிறது என்று விளக்கினார்.

கண்ணில் நீர்பெருக்கெடுத்த கண்ணதாசன், “திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமந் நாராயணா” என்ற அற்புதப் பாடலை இயற்றினார்.

உம்மிடியாரிடம் இந்த மரகதத்தை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு மகுடம் செய்து அதில் பதிக்கும்படி கேட்டுக் கொண்டார். தன் மீது சந்தேகம் கொண்டு அவமானப் படுத்தப்பட்டு விட்டதாய் தவறாக நினைத்தமைக்கு மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டார் உம்மிடியார்.

கல்லின் தன்மையைச் சோதிக்க அல்ல, அடியார்களின் அறியாமையைப் போக்கவே என்று புரிந்து கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

Topics

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories