February 22, 2026, 1:14 AM
26.7 C
Chennai

“தீர்காயுஷ்மாந் பவ, சௌம்ய”-ஜோதிட விளக்கம்) ( அதற்கு என்ன அர்த்தம்?” )  (பெரியவாளின் புல்லரிக்கும் விளக்கம்)

“தீர்காயுஷ்மாந் பவ, சௌம்ய”-ஜோதிட விளக்கம்)

( அதற்கு என்ன அர்த்தம்?” )
26056052 1817618858283271 3930286687593664750 n - 2026
(பெரியவாளின் புல்லரிக்கும் விளக்கம்)

சொன்னவர்; பிரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்…..ஸ்ரீமடம் வித்வான்,காஞ்சிபுரம்.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்

பல வருஷங்களுக்கு முந்தைய செய்தி.

பெரியவா தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், நாலைந்து வித்வான்கள் தரிசனத்துக்காக வந்தவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

பேச்சு வாக்கில் “பக்தர்கள் நமஸ்காரம் பண்ணினால் நான், ‘நாராயண,நாராயண’ என்று சொல்லி ஆசீர்வதிக்கிறேன். சம்சாரிகளான நீங்கள் என்ன சொல்லி வாழ்த்துகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

“தீர்காயுஷ்மாந் பவ, சௌம்ய” என்று சொல்லுகிறோம். அதுதான் வழக்கம்.

“அதற்கு என்ன அர்த்தம்?”

“நீண்ட நாட்கள் சௌக்கியமா இரு என்று அர்த்தம்.”

அங்கிருந்த வித்வான்கள் எல்லோரையும் தனித்தனியே கேட்டார்கள் பெரியவா. எல்லோரும் அதே அர்த்தத்தைச் சொன்னார்கள்.

பெரியவா சில நிமிஷங்கள் மௌனமாக இருந்தார்கள். பின்னர் ” நீங்கள் அத்தனை பேரும் சொன்னது தவறான அர்த்தம்” என்றார்கள்.

பண்டிதர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.! எல்லோரும் படே,படே வித்வான்கள் ‘சிரோமணி’ பெற்றவர்கள்.

“தீர்காயுஷ்மாந் பவ சௌம்ய’ என்ற சாதாரண சம்ஸ்க்ருத வாக்கியத்துக்குஓரளவு வடமொழி பயின்றவர்களே கூடப்பொருள் சொல்லிவிட முடியும். அவ்வளவு எளிமையான சொற்கள் ‘தவறு’ என்கிறார்களே பெரியவா.

“நானே சொல்லிவிடட்டுமா?”

பண்டிதர்கள் செவிகளைத் தீட்டிக் கொண்டார்கள்.

“இருபத்தேழு யோகங்களில் ஒன்றின் பெயர் ஆயுஷ்மான். பதினோரு கரணங்களில். பவ என்று ஒரு கரணம். வார நாட்களில் சௌம்ய வாஸரம்.- புதன் கிழமை வருகிறது. இந்த மூன்றும் புதன்கிழமையில் ஆயுஷ்மான் யோகமும் பவகரணமும் சேர்ந்து வந்தால் அந்த நாள் ரொம்பவும் சிலாக்கியமாகச் சொல்லப்பட்டிருக்கு.

வேகமா விருத்தி ஏற்படும்னு சொல்லுவா. அதனாலே இந்த மூணும் கூடி வந்தால் என்னென்ன நல்ல பலன்கள் கிடைக்குமோ, அதெல்லாம் உனக்குக் கிடைக்கட்டும் என்று ஆசீர்வாதம் பண்றேன்.

வித்வான்கள் அத்தனை பேரும் ஒன்றாக எழுந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்கள்.

நாலைந்து சிரோமணிகள், ஐந்தாறு வித்யா வாசஸ்பதிகள் பட்டம் பெற்றவர்கள் கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக்கொண்டு வந்த வாக்கியத்துக்கு எவ்வளவு புஷ்டியான, ஆழமான பொருளைக் காட்டிக் கொடுத்துவிட்டது இந்த ‘”தீர்காயுஷ்மந் பவ சௌம்ய’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories