“தீர்காயுஷ்மாந் பவ, சௌம்ய”-ஜோதிட விளக்கம்) ( அதற்கு என்ன அர்த்தம்?” )  (பெரியவாளின் புல்லரிக்கும் விளக்கம்)

“தீர்காயுஷ்மாந் பவ, சௌம்ய”-ஜோதிட விளக்கம்)

( அதற்கு என்ன அர்த்தம்?” )
26056052 1817618858283271 3930286687593664750 n - 2026
(பெரியவாளின் புல்லரிக்கும் விளக்கம்)

சொன்னவர்; பிரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்…..ஸ்ரீமடம் வித்வான்,காஞ்சிபுரம்.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்

பல வருஷங்களுக்கு முந்தைய செய்தி.

பெரியவா தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், நாலைந்து வித்வான்கள் தரிசனத்துக்காக வந்தவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

பேச்சு வாக்கில் “பக்தர்கள் நமஸ்காரம் பண்ணினால் நான், ‘நாராயண,நாராயண’ என்று சொல்லி ஆசீர்வதிக்கிறேன். சம்சாரிகளான நீங்கள் என்ன சொல்லி வாழ்த்துகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

“தீர்காயுஷ்மாந் பவ, சௌம்ய” என்று சொல்லுகிறோம். அதுதான் வழக்கம்.

“அதற்கு என்ன அர்த்தம்?”

“நீண்ட நாட்கள் சௌக்கியமா இரு என்று அர்த்தம்.”

அங்கிருந்த வித்வான்கள் எல்லோரையும் தனித்தனியே கேட்டார்கள் பெரியவா. எல்லோரும் அதே அர்த்தத்தைச் சொன்னார்கள்.

பெரியவா சில நிமிஷங்கள் மௌனமாக இருந்தார்கள். பின்னர் ” நீங்கள் அத்தனை பேரும் சொன்னது தவறான அர்த்தம்” என்றார்கள்.

பண்டிதர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.! எல்லோரும் படே,படே வித்வான்கள் ‘சிரோமணி’ பெற்றவர்கள்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 1 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

“தீர்காயுஷ்மாந் பவ சௌம்ய’ என்ற சாதாரண சம்ஸ்க்ருத வாக்கியத்துக்குஓரளவு வடமொழி பயின்றவர்களே கூடப்பொருள் சொல்லிவிட முடியும். அவ்வளவு எளிமையான சொற்கள் ‘தவறு’ என்கிறார்களே பெரியவா.

“நானே சொல்லிவிடட்டுமா?”

பண்டிதர்கள் செவிகளைத் தீட்டிக் கொண்டார்கள்.

“இருபத்தேழு யோகங்களில் ஒன்றின் பெயர் ஆயுஷ்மான். பதினோரு கரணங்களில். பவ என்று ஒரு கரணம். வார நாட்களில் சௌம்ய வாஸரம்.- புதன் கிழமை வருகிறது. இந்த மூன்றும் புதன்கிழமையில் ஆயுஷ்மான் யோகமும் பவகரணமும் சேர்ந்து வந்தால் அந்த நாள் ரொம்பவும் சிலாக்கியமாகச் சொல்லப்பட்டிருக்கு.

வேகமா விருத்தி ஏற்படும்னு சொல்லுவா. அதனாலே இந்த மூணும் கூடி வந்தால் என்னென்ன நல்ல பலன்கள் கிடைக்குமோ, அதெல்லாம் உனக்குக் கிடைக்கட்டும் என்று ஆசீர்வாதம் பண்றேன்.

வித்வான்கள் அத்தனை பேரும் ஒன்றாக எழுந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்கள்.

நாலைந்து சிரோமணிகள், ஐந்தாறு வித்யா வாசஸ்பதிகள் பட்டம் பெற்றவர்கள் கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக்கொண்டு வந்த வாக்கியத்துக்கு எவ்வளவு புஷ்டியான, ஆழமான பொருளைக் காட்டிக் கொடுத்துவிட்டது இந்த ‘”தீர்காயுஷ்மந் பவ சௌம்ய’

ALSO READ:  பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories