அப்படியா? எனக்கா குடுத்திருக்கா? எங்கே அது?”……………(பயபக்தியுடன் செய்த லட்டுகள்)

“அப்படியா? எனக்கா குடுத்திருக்கா? எங்கே அது?”……………(பயபக்தியுடன் செய்த லட்டுகள்)

“அவா கவுண்டர் அல்ல…கௌடாஸ்30623912 1964598777188850 159751544797921280 n - 2026..ஊட்டி, மேட்டுப்பாளையம் பக்கம் அவா நிறைய இருக்கா. சரி….அவாளுக்கு என்ன?” -பெரியவா

கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்

மகா பெரியவா என்ன சாப்பிடுவார் என்று மடத்தில் உள்ளவர்கள் பலருக்கும் தெரியாது என்று சொன்னார்கள்.

அவர் உணவு உட்கொள்வதையும் அநேகமாக யாரும் பார்த்ததில்லை.அவருக்கு சமையலே தனி.அதனால் வெளியாட்கள் யார் கொண்டு வருவதையும் அவர் ஏற்றுக்கொள்வதில்லை. மடத்தினர் அதற்கு அனுமதி கொடுப்பதும் இல்லை.பழங்களை மட்டுமே அவர் ஏற்றுக் கொள்ளும் வழக்கம்.அதையும் அவர் முன்னால்தான் வைக்க வேண்டும்.அவராக விரும்பி பக்தர்களுக்குப் பிரசாதமாக அப்பழங்களை
அவ்வப்போது வழங்குவதுண்டு.

சேலம் பெரியவா கிரகத்தைச் சேர்ந்த திரு.ராஜகோபால் தம்பதி,அப்போது மேட்டுப்பாளயத்தில் இருந்த சமயம். திரு.ராஜகோபாலுக்கு அங்கே காப்பி போர்டிலே வேலை.

அவர்கள் குடியிருந்த வீட்டிற்கருகில் ஒரு கௌடா குடும்பத்தினரும் இருந்தனர்.அவ்வீட்டு மக்களுக்கு மகா பெரியவா மீது அளவு கடந்த பக்தி. மாதம் ஒரு தடவை காஞ்சிக்குச் சென்று வரும் ராஜகோபால் தம்பதி, ஊருக்கு வந்தவுடன் அந்த மகானைத் தாங்கள்நேரில் தரிசித்ததையும்,அவரது அருளை விரும்பி வேண்டிப் பெற்றதையும் கதை கதையாய் சொல்வார்கள்.
..
இப்படி பிறர் சொல்லக் கேட்டே தங்களது மகாபெரியவா பக்தியை வளர்த்துக் கொண்ட அந்த தம்பதியினர், அந்த மகானுக்குத் தாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற தீராத ஆசையை மனதிற்குள் வளர்த்துக் கொண்டார்கள்.

அதனால் ஒருதடவை ராஜகோபால் தம்பதியர் காஞ்சிக்குப் புறப்பட்டபோது அவர்கள் கையில் ஒரு தூக்கைக் கொடுத்து

“இதில் நாங்கள் பயபக்தியுடன் செய்த லட்டுகள் இருக்கின்றன.இதை அந்த மகானுக்கு அர்ப்பணியுங்கள்” என்றார்கள். இதைப் போன்ற வெளியாட்கள் கொண்டு வரும் எதையும் பெரியவா ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று கீதா எவ்வளவோ சொல்லியும் அவர்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை.பிடிவாதமாக அதை எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார்கள்.

காஞ்சி மடத்தின் பழக்க வழக்கங்களை இவர்கள் நன்றாக அறிந்தவர்கள்.யாருக்கும் தெரியாமல் லட்டுவை பெரியவாளிடம் சமர்ப்பிக்க முடியாது..மடத்தில் எத்தனை கைகளைத் தாண்டி இந்த தூக்கு பெரியவாளிடம் போகவேண்டும்?.

கௌடா தம்பதிகள் பிடிவாதமாக இருந்த காரணத்தினால் தூக்குடன் காஞ்சிக்கு வந்தார்கள். மகானின் தரிசனம் எல்லாம் முடிந்தது.

இந்தத் தம்பதியரை மட்டும் அன்போடு விசாரிப்பது மகானின் வழக்கம்.கௌடர்கள் விஷயத்தை அவரிடம் எப்படிச் சொல்வது? மடத்திற்குள்ளே அதைக் கொடுத்திருந்தால் நிச்சயமாக பெரியவாளின் பார்வைக்கே வராது.அதனால் அதைத் தங்கள் பையிலேயே வைத்திருந்தார்கள்.

சொல்ல வாயெடுப்பதற்குள் கீதா மாமியின் ‘நா’ வறண்டு போயிற்று.

“எங்க வீட்டுப் பக்கத்திலே கவுண்டர் குடும்பம் ஒண்ணு இருக்கு….” என்று அந்த மாமி ஆரம்பிக்கும்போதே மகான் இடை மறித்தார்.

“அவா கவுண்டர் அல்ல…கௌடாஸ்..ஊட்டி, மேட்டுப்பாளையம் பக்கம் அவா நிறைய இருக்கா. சரி….அவாளுக்கு என்ன?” அவரே ஆரம்பித்துக் கொடுக்க, மாமிக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. தட்டித் தடுமாறி இந்த லட்டு விஷயத்தை மெதுவாகச் சொல்லி முடித்தார்,

“அப்படியா? எனக்கா குடுத்திருக்கா? எங்கே அது?” என்று அவர் கேட்கவும்…..கீதா மாமி தன் பையிலிருந்து அந்தத் தூக்கை எடுத்து மகானின் முன்னால் வைக்க, அதை எடுத்து தன் அருகில் வைத்துக்கொண்டார்.

“அவாளுக்கு என் பேர்ல பக்தி ஜாஸ்தி” என்று சொல்லி முடித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories