அப்படியா? எனக்கா குடுத்திருக்கா? எங்கே அது?”……………(பயபக்தியுடன் செய்த லட்டுகள்)

“அப்படியா? எனக்கா குடுத்திருக்கா? எங்கே அது?”……………(பயபக்தியுடன் செய்த லட்டுகள்)

“அவா கவுண்டர் அல்ல…கௌடாஸ்30623912 1964598777188850 159751544797921280 n - 2026..ஊட்டி, மேட்டுப்பாளையம் பக்கம் அவா நிறைய இருக்கா. சரி….அவாளுக்கு என்ன?” -பெரியவா

கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்

மகா பெரியவா என்ன சாப்பிடுவார் என்று மடத்தில் உள்ளவர்கள் பலருக்கும் தெரியாது என்று சொன்னார்கள்.

அவர் உணவு உட்கொள்வதையும் அநேகமாக யாரும் பார்த்ததில்லை.அவருக்கு சமையலே தனி.அதனால் வெளியாட்கள் யார் கொண்டு வருவதையும் அவர் ஏற்றுக்கொள்வதில்லை. மடத்தினர் அதற்கு அனுமதி கொடுப்பதும் இல்லை.பழங்களை மட்டுமே அவர் ஏற்றுக் கொள்ளும் வழக்கம்.அதையும் அவர் முன்னால்தான் வைக்க வேண்டும்.அவராக விரும்பி பக்தர்களுக்குப் பிரசாதமாக அப்பழங்களை
அவ்வப்போது வழங்குவதுண்டு.

சேலம் பெரியவா கிரகத்தைச் சேர்ந்த திரு.ராஜகோபால் தம்பதி,அப்போது மேட்டுப்பாளயத்தில் இருந்த சமயம். திரு.ராஜகோபாலுக்கு அங்கே காப்பி போர்டிலே வேலை.

அவர்கள் குடியிருந்த வீட்டிற்கருகில் ஒரு கௌடா குடும்பத்தினரும் இருந்தனர்.அவ்வீட்டு மக்களுக்கு மகா பெரியவா மீது அளவு கடந்த பக்தி. மாதம் ஒரு தடவை காஞ்சிக்குச் சென்று வரும் ராஜகோபால் தம்பதி, ஊருக்கு வந்தவுடன் அந்த மகானைத் தாங்கள்நேரில் தரிசித்ததையும்,அவரது அருளை விரும்பி வேண்டிப் பெற்றதையும் கதை கதையாய் சொல்வார்கள்.
..
இப்படி பிறர் சொல்லக் கேட்டே தங்களது மகாபெரியவா பக்தியை வளர்த்துக் கொண்ட அந்த தம்பதியினர், அந்த மகானுக்குத் தாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற தீராத ஆசையை மனதிற்குள் வளர்த்துக் கொண்டார்கள்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 12 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

அதனால் ஒருதடவை ராஜகோபால் தம்பதியர் காஞ்சிக்குப் புறப்பட்டபோது அவர்கள் கையில் ஒரு தூக்கைக் கொடுத்து

“இதில் நாங்கள் பயபக்தியுடன் செய்த லட்டுகள் இருக்கின்றன.இதை அந்த மகானுக்கு அர்ப்பணியுங்கள்” என்றார்கள். இதைப் போன்ற வெளியாட்கள் கொண்டு வரும் எதையும் பெரியவா ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று கீதா எவ்வளவோ சொல்லியும் அவர்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை.பிடிவாதமாக அதை எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார்கள்.

காஞ்சி மடத்தின் பழக்க வழக்கங்களை இவர்கள் நன்றாக அறிந்தவர்கள்.யாருக்கும் தெரியாமல் லட்டுவை பெரியவாளிடம் சமர்ப்பிக்க முடியாது..மடத்தில் எத்தனை கைகளைத் தாண்டி இந்த தூக்கு பெரியவாளிடம் போகவேண்டும்?.

கௌடா தம்பதிகள் பிடிவாதமாக இருந்த காரணத்தினால் தூக்குடன் காஞ்சிக்கு வந்தார்கள். மகானின் தரிசனம் எல்லாம் முடிந்தது.

இந்தத் தம்பதியரை மட்டும் அன்போடு விசாரிப்பது மகானின் வழக்கம்.கௌடர்கள் விஷயத்தை அவரிடம் எப்படிச் சொல்வது? மடத்திற்குள்ளே அதைக் கொடுத்திருந்தால் நிச்சயமாக பெரியவாளின் பார்வைக்கே வராது.அதனால் அதைத் தங்கள் பையிலேயே வைத்திருந்தார்கள்.

சொல்ல வாயெடுப்பதற்குள் கீதா மாமியின் ‘நா’ வறண்டு போயிற்று.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 11 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

“எங்க வீட்டுப் பக்கத்திலே கவுண்டர் குடும்பம் ஒண்ணு இருக்கு….” என்று அந்த மாமி ஆரம்பிக்கும்போதே மகான் இடை மறித்தார்.

“அவா கவுண்டர் அல்ல…கௌடாஸ்..ஊட்டி, மேட்டுப்பாளையம் பக்கம் அவா நிறைய இருக்கா. சரி….அவாளுக்கு என்ன?” அவரே ஆரம்பித்துக் கொடுக்க, மாமிக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. தட்டித் தடுமாறி இந்த லட்டு விஷயத்தை மெதுவாகச் சொல்லி முடித்தார்,

“அப்படியா? எனக்கா குடுத்திருக்கா? எங்கே அது?” என்று அவர் கேட்கவும்…..கீதா மாமி தன் பையிலிருந்து அந்தத் தூக்கை எடுத்து மகானின் முன்னால் வைக்க, அதை எடுத்து தன் அருகில் வைத்துக்கொண்டார்.

“அவாளுக்கு என் பேர்ல பக்தி ஜாஸ்தி” என்று சொல்லி முடித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories