“தமிழுக்குள்ள சிறப்பு-காஞ்சி மஹா ஸ்வாமிகள்”
(கண்ணதசனிடம் உரையாடும்போது)
“மலையாள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள ஒரு வித்தியாசத்தைப் பார் கண்ணதாசன்.
தமிழிலே ‘வந்தான்’ என்று சொன்னாலே ஒரு ‘ஆண் மகன் வந்தான்’ என்று அர்த்தம். ‘வந்தாள்’ என்றால் ‘ஒரு பெண்மகள் வந்தாள்’ என்று அர்த்தம்.
மலையாளத்தில் ‘வந்நூ’ என்கிறார்கள். அந்த வினைச் சொல்லில் வந்தது ஆணா பெண்ணா என்று தெரியவில்லை. அதனால் ‘அவனா, அவளா’ என்பதைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது.
ஆங்கிலத்திலும் அந்தக் கதிதான்” என்றார்


