எனக்கு பசிக்கிறது ‘ப்ரெட்’ வேணும்.கிடைக்குமா?

“எனக்குப் பசிக்கிறது ‘ப்ரெட்’ வேணும்.கிடைக்குமா?”

(ஒரு மராட்டிய அன்பருக்கு பசி நீக்க உதவிய………. ஸ்ரீ பெரியவாளின் கருணை)

(அன்று அனுஷ நட்சத்திரம்.)(கல்லினுள் இருக்கும் தேரைக்கும் கருப்பைக்குள் இருக்கும் உயிருக்கும் யார் உணவு அளிக்கிறார்கள்? பகவானுக்கு அல்லவா அந்தப் பொறுப்பு.)
periyava side profile 1 - 2026
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-46
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

அன்று அனுஷ நட்சத்திரம். ஒவ்வோர் அனுஷ நட்சத்திரத்துக்கும் செங்கல்பட்டு சிரஸ்தார் ராமநாதய்யர் ஸ்ரீ பெரியவாள் தரிசனத்துக்கு வருவது வழக்கம்.அன்றும் வந்திருந்தார்.

ஸ்ரீ பெரியவாள் அருகில் இருந்த சிஷ்யரிடம், “எனக்குப் பசிக்கிறது ப்ரெட் வேணும் .கிடைக்குமா?” என்று கேட்டார்கள்.

சிஷ்யருக்குப் புரியவில்லை.

பிறகு ஸ்ரீ பெரியவாளே சொன்னார்கள்;

“சிரஸ்தார் ராமநாதய்யரைக்கேள்.ப்ரெட் இருக்கா என்று”

ராமனாதய்யர் வெளியில் சாப்பிடுவதில்லை. ஆசார சீலர்.கையில் சப்பாத்தி எடுத்து வந்திருந்தார். ஸ்ரீ பெரியவாள் கேட்டதும் தம்மிடம் சப்பாத்தி இருப்பதாகச் சொன்னார்.
ஸ்ரீ பெரியவாள், ” அவர் சாப்பிட்டது போக மீதியை சங்கர் பவாரிடம் கொடுக்கச் சொல்” என்றார்கள்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 1 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

பவார், மகாராஷ்டிர ராஜ்ஜியத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீ பெரியவாள் முகாமுடன் கூடவே காவலுக்கு வந்து கொண்டிருக்கிறார். அங்கங்கே ‘பன்,ப்ரெட்,,ரொட்டி என்று டீக்கடையில் வாங்கிச் சாப்பிடுவார்.அன்று காலையிலிருந்து வழியில் ஒன்றும் சரியாகக் கிடைக்கவில்லை. அவர் சுத்தப் பட்டினி. எனவே சோர்ந்து போய், யாரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் பரிதவித்துக் கொண்டிருந்தார்.

ஸ்ரீ பெரியவாள் சொல்படி சிரஸ்தார் ராமநாதய்யர் தம்மிடம் இருந்த சப்பாத்தி,அதற்குத் தொட்டுக் கொள்ள வைத்திருந்த தக்காளி சட்னி எல்லாவற்றையும் அப்படியே கொடுத்து விட்டார்.

பவாருக்கு நல்ல பசி.அவர் கொடுத்த அத்தனையையும் திருப்தியாகச் சாப்பிட்டு முடித்தார்.அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை.தன் பசி பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? அதுதான் இன்று வரைக்கும் பவாருக்குப் புரியவில்லை. சொல்லிச் சொல்லி மாய்ந்து போவார்.

ஸ்ரீபெரியவாள் யார்?படியளுக்கும் பகவான் இல்லையா?

அந்தக் காலத்தில் நம் முன்னோர் சொல்வார்கள்;

கல்லினுள் இருக்கும் தேரைக்கும் கருப்பைக்குள் இருக்கும் உயிருக்கும் யார் உணவு அளிக்கிறார்கள்? பகவானுக்கு அல்லவா அந்தப் பொறுப்பு.

ஒவ்வொரு ஜீவராசிக்கும் வேளை தவறாமல் படி அளப்பவன் அவன். பகவானான ஸ்ரீ பெரியவாளுக்கு சொல்லியா தெரிய வேண்டும்?

ALSO READ:  பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories