எனக்கு பசிக்கிறது ‘ப்ரெட்’ வேணும்.கிடைக்குமா?

“எனக்குப் பசிக்கிறது ‘ப்ரெட்’ வேணும்.கிடைக்குமா?”

(ஒரு மராட்டிய அன்பருக்கு பசி நீக்க உதவிய………. ஸ்ரீ பெரியவாளின் கருணை)

(அன்று அனுஷ நட்சத்திரம்.)(கல்லினுள் இருக்கும் தேரைக்கும் கருப்பைக்குள் இருக்கும் உயிருக்கும் யார் உணவு அளிக்கிறார்கள்? பகவானுக்கு அல்லவா அந்தப் பொறுப்பு.)
periyava side profile 1 - 2026
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-46
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

அன்று அனுஷ நட்சத்திரம். ஒவ்வோர் அனுஷ நட்சத்திரத்துக்கும் செங்கல்பட்டு சிரஸ்தார் ராமநாதய்யர் ஸ்ரீ பெரியவாள் தரிசனத்துக்கு வருவது வழக்கம்.அன்றும் வந்திருந்தார்.

ஸ்ரீ பெரியவாள் அருகில் இருந்த சிஷ்யரிடம், “எனக்குப் பசிக்கிறது ப்ரெட் வேணும் .கிடைக்குமா?” என்று கேட்டார்கள்.

சிஷ்யருக்குப் புரியவில்லை.

பிறகு ஸ்ரீ பெரியவாளே சொன்னார்கள்;

“சிரஸ்தார் ராமநாதய்யரைக்கேள்.ப்ரெட் இருக்கா என்று”

ராமனாதய்யர் வெளியில் சாப்பிடுவதில்லை. ஆசார சீலர்.கையில் சப்பாத்தி எடுத்து வந்திருந்தார். ஸ்ரீ பெரியவாள் கேட்டதும் தம்மிடம் சப்பாத்தி இருப்பதாகச் சொன்னார்.
ஸ்ரீ பெரியவாள், ” அவர் சாப்பிட்டது போக மீதியை சங்கர் பவாரிடம் கொடுக்கச் சொல்” என்றார்கள்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 12 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பவார், மகாராஷ்டிர ராஜ்ஜியத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீ பெரியவாள் முகாமுடன் கூடவே காவலுக்கு வந்து கொண்டிருக்கிறார். அங்கங்கே ‘பன்,ப்ரெட்,,ரொட்டி என்று டீக்கடையில் வாங்கிச் சாப்பிடுவார்.அன்று காலையிலிருந்து வழியில் ஒன்றும் சரியாகக் கிடைக்கவில்லை. அவர் சுத்தப் பட்டினி. எனவே சோர்ந்து போய், யாரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் பரிதவித்துக் கொண்டிருந்தார்.

ஸ்ரீ பெரியவாள் சொல்படி சிரஸ்தார் ராமநாதய்யர் தம்மிடம் இருந்த சப்பாத்தி,அதற்குத் தொட்டுக் கொள்ள வைத்திருந்த தக்காளி சட்னி எல்லாவற்றையும் அப்படியே கொடுத்து விட்டார்.

பவாருக்கு நல்ல பசி.அவர் கொடுத்த அத்தனையையும் திருப்தியாகச் சாப்பிட்டு முடித்தார்.அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை.தன் பசி பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? அதுதான் இன்று வரைக்கும் பவாருக்குப் புரியவில்லை. சொல்லிச் சொல்லி மாய்ந்து போவார்.

ஸ்ரீபெரியவாள் யார்?படியளுக்கும் பகவான் இல்லையா?

அந்தக் காலத்தில் நம் முன்னோர் சொல்வார்கள்;

கல்லினுள் இருக்கும் தேரைக்கும் கருப்பைக்குள் இருக்கும் உயிருக்கும் யார் உணவு அளிக்கிறார்கள்? பகவானுக்கு அல்லவா அந்தப் பொறுப்பு.

ஒவ்வொரு ஜீவராசிக்கும் வேளை தவறாமல் படி அளப்பவன் அவன். பகவானான ஸ்ரீ பெரியவாளுக்கு சொல்லியா தெரிய வேண்டும்?

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 11 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories