அத்திவரதர் வைபவம்: காஞ்சி உள்ளூர் பக்தர்கள் அனுமதிச் சீட்டு பெற 14 மையங்கள் இன்று முதல்!

Published:

varadhar vasanthamandapam2 - 2026

காஞ்சி அத்திவரதர் வைபவத்திற்கு உள்ளூர் பக்தர்கள் ஆதார் அட்டையை காட்டி அனுமதிச்சீட்டு பெறலாம் என்று 14 மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

காஞ்சி வரதர் வைபவம் வரும் ஜூலை 1ம் தேதி திங்கட்கிழமை தொடங்கி 48 நாட்கள் நடைபெற உள்ளது. வரதராஜ பெருமாள் கோவிலில் தொடங்க உள்ள இந்த வைபவத்துக்கு பக்தர்கள் அதிகம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

காஞ்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்த பக்தர்கள் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்தி வரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது!

கிழக்கு கோபுரம் வழியே ஆதார் அட்டையை காட்டி உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உள்ளூர் பக்தர்கள் ஆதார் அட்டையை காட்டி அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள 14 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேற்று இரவு தெரிவித்தார்

அவை குறித்த விவரம்..:

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

darshan details - 2026

இந்த மையங்களில், பக்தர்கள் தங்களது ஆதார் அட்டையைக் காட்டி அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

குடும்பத்தில் இருக்கும் அனைவரும் இந்த மையத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. யாராவது ஒருவர் குடும்பத்தினரின் ஆதார் அட்டையை கொண்டு வந்து காட்டி அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

இந்த மையங்கள் இன்று முதல் காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை செயல்படும் என்று ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img