விஷ்ணுசஹஸ்ரநாமத்தில் கடைசியில் வரும் ஒரு ஸ்லோகம்
ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச பீதா
கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா:
ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம்
விமுக்தது கா ஸுகினோ பவந்து…
இது கூரேசர் அருளிய நாராயணாஷ்டகத்தில் வரும் எட்டாவது வரிகள்…
இதன் பொருள்:
மனக்கவலை கொண்டவர்கள், துக்கத்தால் வருந்துபவர்கள், சொத்துகளை இழந்தவர்கள், பயம் கொண்டவர்கள், தீராத நோயினால் வேதனையுறுபவர்கள் என அனைவரும் ‘நாராயண’ எனும் திருநாமத்தை உச்சரித்தபோதே அந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு சுகமடைவார்கள். அப்படியொரு அமைதியை எங்களுக்கு அளிப்பாய் நாராயணா!இதனை தினமும் சொல்வதால் துக்க நிவர்த்தி, பிணி நிவர்த்தி, பய நிவர்த்தி , இழந்த சொத்துக்களை திரும்ப பெறுதல் ,ஆகியன மட்டுமின்றி சகலவிதமான துக்கங்களிலிருந்தும் விடுபடலாம்.