“பெரியவாளுக்கு தெரியாம உப்புமா சாப்பிட்ட கதை”

“பெரியவாளுக்கு தெரியாம உப்புமா சாப்பிட்ட கதை”

(   “பொய்” என்று நிதர்சனமாக தெரிந்தாலும், அதை சுட்டிக் காட்டாமல், அப்பாவிபோல் அந்த பொய்யை கேட்டுக் கொள்வார். அதேபோல் உள்ளே வந்த பலர் மாட்டினார்கள். பெரியவா யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. )

ஞாயிற்றுக்கிழமைகளில் சூர்ய அஸ்தமனத்துக்கு அப்புறம் உணவு அருந்தக் கூடாது என்பது பெரியவா உத்திரவு.
1391799 656538261058009 260030728 n - 2026

பெரியவாளே கூட, ஒருமுறை உடல்நிலை சரியில்லாத போது தொண்டர் கொடுத்த பாலை சூர்ய அஸ்தமனத்துக்கு பிறகு சாப்பிட்டு விட்டார். ஆனால் அது தெரிந்ததும் அடுத்து வந்த ஒரு வாரம் சுத்த உபவாசம் இருந்தார்.

ஒரு ஞாயிற்றுகிழமை. இரவு பன்னண்டு மணி. தன் அணுக்கத் தொண்டரான ஸ்ரீ வேதபுரி சாஸ்த்ரிகளை எழுப்பி தனியே அழைத்துக் கொண்டு போய் எசையனூரில் அவருடைய குடும்பம், வாய்க்காலில் தண்ணி வரத்து, தோட்டத்து செம்பருத்தி செடி என்று கனகாரியமாக எல்லாவற்றையும் விஜாரித்துவிட்டு, ” நேத்து ராத்திரி என்னடா ஆஹாரம் பண்ணினேள்?” என்றார்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 28 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

“ரவா உப்புமா” வேதபுரி சாஸ்த்ரிகள் பொய் சொல்லத் தெரியாதவர்.

கிழவனார் மேலும் கிண்டினார் ” யாரல்லாம் சாப்ட்டா?”

வரிசையாக எல்லார் பெயரையும் சொன்னார் வேதபுரி சாஸ்த்ரிகள்.

“சரி போ” படுத்துக் கொண்டுவிட்டார். வேதபுரி மாமாவை கூட்டி கொண்டு வந்த காரியம் ஆயாச்சு. மறுநாள் திங்கட்கிழமை கண்ணன் என்ற தொண்டர் வந்து நமஸ்காரம் பண்ணினார். பொதுவான விஷயங்களை பேசி விட்டு மெதுவாக ” நேத்து ராத்திரி என்ன ஆஹாரம் பண்ணினே?”  தெரியாதவர் மாதிரி ஒரு கேள்வி!

“நேத்து ஞாயித்துக்கிழமையாச்சே! ராத்திரி ஒண்ணும் சாப்பிடலை……….” என்றார் குழறியபடியே!

“ஏன் பொய் சொல்லறே? ரவா உப்புமா கெளறிக் குடுத்தானாமே வேதபுரி?” என்று பெரியவா கேட்கவில்லை. “பொய்” என்று நிதர்சனமாக தெரிந்தாலும், அதை சுட்டிக் காட்டாமல், அப்பாவிபோல் அந்த பொய்யை கேட்டுக் கொள்வார். அதேபோல் உள்ளே வந்த பலர் மாட்டினார்கள். பெரியவா யாரிடமும் எதுவும் கேட்கவில்லை.

ஆனால், ரவா உப்புமா விவஹாரத்தை வேதபுரி எல்லாத் தொண்டர்களிடமும் சொல்லி, எல்லார் வயிற்றிலும் புளியைக் கரைத்து விட்டார்!

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 29 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories