December 6, 2025, 6:54 PM
26.8 C
Chennai

“பெரியவாளுக்கு தெரியாம உப்புமா சாப்பிட்ட கதை”

“பெரியவாளுக்கு தெரியாம உப்புமா சாப்பிட்ட கதை”

(   “பொய்” என்று நிதர்சனமாக தெரிந்தாலும், அதை சுட்டிக் காட்டாமல், அப்பாவிபோல் அந்த பொய்யை கேட்டுக் கொள்வார். அதேபோல் உள்ளே வந்த பலர் மாட்டினார்கள். பெரியவா யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. )

ஞாயிற்றுக்கிழமைகளில் சூர்ய அஸ்தமனத்துக்கு அப்புறம் உணவு அருந்தக் கூடாது என்பது பெரியவா உத்திரவு.
1391799 656538261058009 260030728 n - 2025

பெரியவாளே கூட, ஒருமுறை உடல்நிலை சரியில்லாத போது தொண்டர் கொடுத்த பாலை சூர்ய அஸ்தமனத்துக்கு பிறகு சாப்பிட்டு விட்டார். ஆனால் அது தெரிந்ததும் அடுத்து வந்த ஒரு வாரம் சுத்த உபவாசம் இருந்தார்.

ஒரு ஞாயிற்றுகிழமை. இரவு பன்னண்டு மணி. தன் அணுக்கத் தொண்டரான ஸ்ரீ வேதபுரி சாஸ்த்ரிகளை எழுப்பி தனியே அழைத்துக் கொண்டு போய் எசையனூரில் அவருடைய குடும்பம், வாய்க்காலில் தண்ணி வரத்து, தோட்டத்து செம்பருத்தி செடி என்று கனகாரியமாக எல்லாவற்றையும் விஜாரித்துவிட்டு, ” நேத்து ராத்திரி என்னடா ஆஹாரம் பண்ணினேள்?” என்றார்.

“ரவா உப்புமா” வேதபுரி சாஸ்த்ரிகள் பொய் சொல்லத் தெரியாதவர்.

கிழவனார் மேலும் கிண்டினார் ” யாரல்லாம் சாப்ட்டா?”

வரிசையாக எல்லார் பெயரையும் சொன்னார் வேதபுரி சாஸ்த்ரிகள்.

“சரி போ” படுத்துக் கொண்டுவிட்டார். வேதபுரி மாமாவை கூட்டி கொண்டு வந்த காரியம் ஆயாச்சு. மறுநாள் திங்கட்கிழமை கண்ணன் என்ற தொண்டர் வந்து நமஸ்காரம் பண்ணினார். பொதுவான விஷயங்களை பேசி விட்டு மெதுவாக ” நேத்து ராத்திரி என்ன ஆஹாரம் பண்ணினே?”  தெரியாதவர் மாதிரி ஒரு கேள்வி!

“நேத்து ஞாயித்துக்கிழமையாச்சே! ராத்திரி ஒண்ணும் சாப்பிடலை……….” என்றார் குழறியபடியே!

“ஏன் பொய் சொல்லறே? ரவா உப்புமா கெளறிக் குடுத்தானாமே வேதபுரி?” என்று பெரியவா கேட்கவில்லை. “பொய்” என்று நிதர்சனமாக தெரிந்தாலும், அதை சுட்டிக் காட்டாமல், அப்பாவிபோல் அந்த பொய்யை கேட்டுக் கொள்வார். அதேபோல் உள்ளே வந்த பலர் மாட்டினார்கள். பெரியவா யாரிடமும் எதுவும் கேட்கவில்லை.

ஆனால், ரவா உப்புமா விவஹாரத்தை வேதபுரி எல்லாத் தொண்டர்களிடமும் சொல்லி, எல்லார் வயிற்றிலும் புளியைக் கரைத்து விட்டார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories