மலேசிய மொழியில் அபிராமி அந்தாதி

 

kasi kanchi mutt - 2026

மலேசிய மொழியில் முதல் அடியை எடுத்துக் கொடுத்த மகா பெரியவா…

மலேசிய மொழி என்ன, மண்ணுலக மொழிகள் அத்தனையுமே பெரியவாளுக்குத் தெரியும்!”- ஒரு அன்பர்(.”விண்ணுலக மொழியும் தெரியும்!” – என்றார் இன்னொருவர்)

தொகுப்பாளர்: டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு: வரகூரான் நாராயணன்

மலேஷியாவில் சூசை என்று ஒரு கவிஞர். பிறப்பால் கிறிஸ்தவர். தமிழ்மொழியின்மேல் ஆராத அன்பும் இந்து சமயத் தத்துவங்களிடம் ஈடுபாடும் உடையவர்.

சென்னை நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு, மகாஸ்வாமிகளைத் தரிசிக்கக் காஞ்சிபுரம் வந்தார்.

அன்றைக்கு என்று ஏராளமான கூட்டம். இவர்கள், பெரியவாளைத் தரிசிக்க முடியுமா? முடிந்தாலும் மடத்துக்கு முன்னரே அனுப்பப்பட்ட மலேஷிய மொழியில் பெயர்க்கப்பட்ட “அபிராமி அந்தாதி, பாஞ்சாலி சபதம்” பற்றிப் பேசமுடியுமா? என்ற தவிப்பு.

ஒரு தொண்டர் வந்தார்.

“இங்கே யாரு சூசை?”

“நான்தான்…”

“உங்க சிநேகிதர் ராமமூர்த்தி?”

“இதோ, இவர்தான்…”

“ரெண்டு பேரையும், உள்ளே அழைத்து வரும்படி உத்திரவாயிருக்கு…”

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

உள்ளே சென்றார்கள்.

“இவர்தான் சூசையா?”

மெய்சிலிர்த்தது கவிஞருக்கு.

“அபிராமி அந்தாதியை,மொதல்லே,உங்க ஊர் பாஷையிலே சொல்லுங்கோ.அப்புறம், தமிழ்லே சொல்லுங்கோ…”

கவிஞருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. முதலில் மலேசிய மொழியில்-அவரே மொழிபெயர்த்த அபிராமி அந்தாதியைச் சொன்னார். பின், தமிழிலும் சொல்லும்படி உத்தரவாகியிருக்கிறதே!

முதல் பாட்டின் முதல் அடியே நினைவுக்கு வரவில்லை! தலையில் குட்டிக் கொண்டார். ஊஹூம்!

அவர் சங்கடத்தைப் புரிந்துகொண்ட பெரியவா, தானே முதல் அடியை எடுத்துக் கொடுத்தார்கள்.

கவிஞர், அந்தாதி சொல்லி முடித்ததும், “ரொம்ப நன்றாகச் செய்திருக்கிறீர்கள். உங்கள் மொழிபெயர்ப்பில் ஏழு சம்ஸ்க்ருத வார்த்தைகள் இருக்கின்றன” என்று கூறி அதிர்ச்சியடையச் செய்ததுடன், அவைகள் என்னென்ன என்று பட்டியலிட்டார்கள்.

பின்னர், மலேசியாவில் ஓர் இடத்தைக் குறிப்பிட்டு “அங்கே ஒரு சிவன் கோயில் இருக்குமே?” என்று கேட்டார்கள்.

“ஆமாம்…இருக்கிறது” என்று வியப்புடன் கூறினார் சூசை

சிறிதுநேரம்,மலேசிய நாட்டின் பூகோளம்,ஆலயங்கள் பற்றிப் பேசினார்கள்.

பிரசாதம் கொடுத்தபோது, மலேசிய மொழியில் தான் கேட்ட அபிராமி அந்தாதியின் முதல் வரியைக் கூறி ஆசீர்வதித்தார்கள்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

சூசை திகைத்துப் போய் நின்றார்.

‘மகாஸ்வாமிகளின் மனத்தில்,அயல் மொழியில் ஒரே ஒருமுறை கேட்ட அந்தப் பாடல் வரி,எப்படிப் பதிவாயிற்று?’ என்று வியந்தார்கள்.-கூடியிருந்த அன்பர்கள், “மலேசிய மொழி என்ன, மண்ணுலக மொழிகள் அத்தனையுமே பெரியவாளுக்குத் தெரியும்!” என்றார் ஓர் அன்பர்.

“விண்ணுலக மொழியும் தெரியும்!” – என்றார் இன்னொருவர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories