மலேசிய மொழியில் அபிராமி அந்தாதி

 

kasi kanchi mutt - 2026

மலேசிய மொழியில் முதல் அடியை எடுத்துக் கொடுத்த மகா பெரியவா…

மலேசிய மொழி என்ன, மண்ணுலக மொழிகள் அத்தனையுமே பெரியவாளுக்குத் தெரியும்!”- ஒரு அன்பர்(.”விண்ணுலக மொழியும் தெரியும்!” – என்றார் இன்னொருவர்)

தொகுப்பாளர்: டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு: வரகூரான் நாராயணன்

மலேஷியாவில் சூசை என்று ஒரு கவிஞர். பிறப்பால் கிறிஸ்தவர். தமிழ்மொழியின்மேல் ஆராத அன்பும் இந்து சமயத் தத்துவங்களிடம் ஈடுபாடும் உடையவர்.

சென்னை நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு, மகாஸ்வாமிகளைத் தரிசிக்கக் காஞ்சிபுரம் வந்தார்.

அன்றைக்கு என்று ஏராளமான கூட்டம். இவர்கள், பெரியவாளைத் தரிசிக்க முடியுமா? முடிந்தாலும் மடத்துக்கு முன்னரே அனுப்பப்பட்ட மலேஷிய மொழியில் பெயர்க்கப்பட்ட “அபிராமி அந்தாதி, பாஞ்சாலி சபதம்” பற்றிப் பேசமுடியுமா? என்ற தவிப்பு.

ஒரு தொண்டர் வந்தார்.

“இங்கே யாரு சூசை?”

“நான்தான்…”

“உங்க சிநேகிதர் ராமமூர்த்தி?”

“இதோ, இவர்தான்…”

“ரெண்டு பேரையும், உள்ளே அழைத்து வரும்படி உத்திரவாயிருக்கு…”

உள்ளே சென்றார்கள்.

“இவர்தான் சூசையா?”

மெய்சிலிர்த்தது கவிஞருக்கு.

“அபிராமி அந்தாதியை,மொதல்லே,உங்க ஊர் பாஷையிலே சொல்லுங்கோ.அப்புறம், தமிழ்லே சொல்லுங்கோ…”

கவிஞருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. முதலில் மலேசிய மொழியில்-அவரே மொழிபெயர்த்த அபிராமி அந்தாதியைச் சொன்னார். பின், தமிழிலும் சொல்லும்படி உத்தரவாகியிருக்கிறதே!

முதல் பாட்டின் முதல் அடியே நினைவுக்கு வரவில்லை! தலையில் குட்டிக் கொண்டார். ஊஹூம்!

அவர் சங்கடத்தைப் புரிந்துகொண்ட பெரியவா, தானே முதல் அடியை எடுத்துக் கொடுத்தார்கள்.

கவிஞர், அந்தாதி சொல்லி முடித்ததும், “ரொம்ப நன்றாகச் செய்திருக்கிறீர்கள். உங்கள் மொழிபெயர்ப்பில் ஏழு சம்ஸ்க்ருத வார்த்தைகள் இருக்கின்றன” என்று கூறி அதிர்ச்சியடையச் செய்ததுடன், அவைகள் என்னென்ன என்று பட்டியலிட்டார்கள்.

பின்னர், மலேசியாவில் ஓர் இடத்தைக் குறிப்பிட்டு “அங்கே ஒரு சிவன் கோயில் இருக்குமே?” என்று கேட்டார்கள்.

“ஆமாம்…இருக்கிறது” என்று வியப்புடன் கூறினார் சூசை

சிறிதுநேரம்,மலேசிய நாட்டின் பூகோளம்,ஆலயங்கள் பற்றிப் பேசினார்கள்.

பிரசாதம் கொடுத்தபோது, மலேசிய மொழியில் தான் கேட்ட அபிராமி அந்தாதியின் முதல் வரியைக் கூறி ஆசீர்வதித்தார்கள்.

சூசை திகைத்துப் போய் நின்றார்.

‘மகாஸ்வாமிகளின் மனத்தில்,அயல் மொழியில் ஒரே ஒருமுறை கேட்ட அந்தப் பாடல் வரி,எப்படிப் பதிவாயிற்று?’ என்று வியந்தார்கள்.-கூடியிருந்த அன்பர்கள், “மலேசிய மொழி என்ன, மண்ணுலக மொழிகள் அத்தனையுமே பெரியவாளுக்குத் தெரியும்!” என்றார் ஓர் அன்பர்.

“விண்ணுலக மொழியும் தெரியும்!” – என்றார் இன்னொருவர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories