அச்சன்கோயிலில் இன்று புஷ்பாஞ்சலி!

achankoil therottam rathothsavam - 2026

அச்சன்கோவில் தர்மசாஸ்தாவுக்கு புஷ்பாஞ்சலி வழிபாடு இந்த ஆண்டு ஜன25 ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெறுகிறது.

புஷ்பாஞ்சலி நடத்த 2 டன் பூக்கள் தமிழகம் கேரளா பக்தர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டு நீண்ட நேரம் புஷ்பாஞ்சலி தர்மசாஸ்தாவுக்கு நடைபெறும்.

செங்கோட்டையில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற ஐயப்பன் படை வீடு கோவில்களில் ஒன்றான தர்மசாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பலர் சென்று வருகிறார்கள்.

இந்த கோவில் பரசுராமரின் கைகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.பகவான் விக்ரகம் தீ சேதம் ஏற்பட்டு புதிய சிலை மறு பிரதிஷ்டை தை மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று பிரதிஷ்டை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. எனவே தை மாதத்தில் ரேவதி நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் புஷ்பாஞ்சலி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் ஜன25ல் புஷ்பாஞ்சலி நடைபெறும். இதனை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், கலசாபிஷேகம், அஷ்டாபிஷேகம் ஆகியன நடைபெறும். மதியம் களபாபிஷேகம் நடைபெறும். மாலையில் யானை மீது 2 டன் பூக்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பின்னர் அந்த பூக்களை கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெறும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும்

மறு பிரதிஷ்டை தினம்: பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கருதப்படும் இந்த ஆலயத்தில், சுவாமி விக்ரகம் மறு பிரதிஷ்டை செய்யப்பட்ட தினமே புஷ்பாஞ்சலி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

மலர் அபிஷேகம்: இந்த விழாவின் போது ஐயப்பனுக்கு சுமார் 2 டன் மலர்களால் மெகா புஷ்பாஞ்சலி (மலர் அபிஷேகம்) செய்யப்படுகிறது. இது தென்னிந்தியாவிலேயே அதிக அளவிலான பூக்களைக் கொண்டு செய்யப்படும் ஒரு வழிபாடாகக் கருதப்படுகிறது.

பக்தர்கள் வருகை: இந்த விழாவில் கேரளா மட்டுமின்றி தமிழகத்தின் தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

கோவில் நடை திறக்கும் நேரம்
புஷ்பாஞ்சலி விழா நாட்களில் வழிபாடுகள் அதிகாலை முதலே தொடங்குகின்றன. பொதுவான கோவில் நேரங்கள்:
காலை: 5:00 AM முதல் 12:00 PM வரை
மாலை: 5:00 PM முதல் 8:00 PM (அல்லது 9:00 PM) வரை

அச்சன்கோவில் ஆலயத்தின் தனித்துவம்

மகா வைத்தியர்: இங்குள்ள ஐயப்பன் விஷப் பூச்சிகள் மற்றும் பாம்பு கடியைக் குணப்படுத்தும் “மகா வைத்தியராக” போற்றப்படுகிறார். சுவாமி சிலையின் வலது உள்ளங்கையில் உள்ள சந்தனம் தீராத நோய்களையும் தீர்க்கும் மருந்தாக நம்பப்படுகிறது.

குடும்பக் கோலம்: சபரிமலையில் பிரம்மச்சாரியாக இருக்கும் ஐயப்பன், இங்கு தனது மனைவிகளான பூர்ணா மற்றும் புஷ்கலா ஆகியோருடன் குடும்பத்தோடு (கிரகஸ்த வடிவில்) காட்சியளிக்கிறார்.

அமைவிடம்: இது கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இருந்தாலும், தமிழக எல்லைக்கு (செங்கோட்டை) மிக அருகிலேயே (சுமார் 25-30 கி.மீ) அமைந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories