அச்சன்கோயிலில் இன்று புஷ்பாஞ்சலி!

achankoil therottam rathothsavam - 2026

அச்சன்கோவில் தர்மசாஸ்தாவுக்கு புஷ்பாஞ்சலி வழிபாடு இந்த ஆண்டு ஜன25 ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெறுகிறது.

புஷ்பாஞ்சலி நடத்த 2 டன் பூக்கள் தமிழகம் கேரளா பக்தர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டு நீண்ட நேரம் புஷ்பாஞ்சலி தர்மசாஸ்தாவுக்கு நடைபெறும்.

செங்கோட்டையில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற ஐயப்பன் படை வீடு கோவில்களில் ஒன்றான தர்மசாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பலர் சென்று வருகிறார்கள்.

இந்த கோவில் பரசுராமரின் கைகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.பகவான் விக்ரகம் தீ சேதம் ஏற்பட்டு புதிய சிலை மறு பிரதிஷ்டை தை மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று பிரதிஷ்டை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. எனவே தை மாதத்தில் ரேவதி நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் புஷ்பாஞ்சலி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் ஜன25ல் புஷ்பாஞ்சலி நடைபெறும். இதனை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், கலசாபிஷேகம், அஷ்டாபிஷேகம் ஆகியன நடைபெறும். மதியம் களபாபிஷேகம் நடைபெறும். மாலையில் யானை மீது 2 டன் பூக்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பின்னர் அந்த பூக்களை கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெறும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும்

மறு பிரதிஷ்டை தினம்: பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கருதப்படும் இந்த ஆலயத்தில், சுவாமி விக்ரகம் மறு பிரதிஷ்டை செய்யப்பட்ட தினமே புஷ்பாஞ்சலி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

மலர் அபிஷேகம்: இந்த விழாவின் போது ஐயப்பனுக்கு சுமார் 2 டன் மலர்களால் மெகா புஷ்பாஞ்சலி (மலர் அபிஷேகம்) செய்யப்படுகிறது. இது தென்னிந்தியாவிலேயே அதிக அளவிலான பூக்களைக் கொண்டு செய்யப்படும் ஒரு வழிபாடாகக் கருதப்படுகிறது.

பக்தர்கள் வருகை: இந்த விழாவில் கேரளா மட்டுமின்றி தமிழகத்தின் தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

கோவில் நடை திறக்கும் நேரம்
புஷ்பாஞ்சலி விழா நாட்களில் வழிபாடுகள் அதிகாலை முதலே தொடங்குகின்றன. பொதுவான கோவில் நேரங்கள்:
காலை: 5:00 AM முதல் 12:00 PM வரை
மாலை: 5:00 PM முதல் 8:00 PM (அல்லது 9:00 PM) வரை

அச்சன்கோவில் ஆலயத்தின் தனித்துவம்

மகா வைத்தியர்: இங்குள்ள ஐயப்பன் விஷப் பூச்சிகள் மற்றும் பாம்பு கடியைக் குணப்படுத்தும் “மகா வைத்தியராக” போற்றப்படுகிறார். சுவாமி சிலையின் வலது உள்ளங்கையில் உள்ள சந்தனம் தீராத நோய்களையும் தீர்க்கும் மருந்தாக நம்பப்படுகிறது.

குடும்பக் கோலம்: சபரிமலையில் பிரம்மச்சாரியாக இருக்கும் ஐயப்பன், இங்கு தனது மனைவிகளான பூர்ணா மற்றும் புஷ்கலா ஆகியோருடன் குடும்பத்தோடு (கிரகஸ்த வடிவில்) காட்சியளிக்கிறார்.

அமைவிடம்: இது கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இருந்தாலும், தமிழக எல்லைக்கு (செங்கோட்டை) மிக அருகிலேயே (சுமார் 25-30 கி.மீ) அமைந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Topics

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி இறுதி ஆட்டம் 08.03.2026 அதிரடி வெற்றி – கோப்பையை வென்ற இந்திய அணி

மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

பும்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Entertainment News

Popular Categories