அச்சன்கோயிலில் இன்று புஷ்பாஞ்சலி!

Published:

achankoil therottam rathothsavam - 2026

அச்சன்கோவில் தர்மசாஸ்தாவுக்கு புஷ்பாஞ்சலி வழிபாடு இந்த ஆண்டு ஜன25 ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெறுகிறது.

புஷ்பாஞ்சலி நடத்த 2 டன் பூக்கள் தமிழகம் கேரளா பக்தர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டு நீண்ட நேரம் புஷ்பாஞ்சலி தர்மசாஸ்தாவுக்கு நடைபெறும்.

செங்கோட்டையில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற ஐயப்பன் படை வீடு கோவில்களில் ஒன்றான தர்மசாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பலர் சென்று வருகிறார்கள்.

இந்த கோவில் பரசுராமரின் கைகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.பகவான் விக்ரகம் தீ சேதம் ஏற்பட்டு புதிய சிலை மறு பிரதிஷ்டை தை மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று பிரதிஷ்டை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. எனவே தை மாதத்தில் ரேவதி நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் புஷ்பாஞ்சலி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் ஜன25ல் புஷ்பாஞ்சலி நடைபெறும். இதனை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், கலசாபிஷேகம், அஷ்டாபிஷேகம் ஆகியன நடைபெறும். மதியம் களபாபிஷேகம் நடைபெறும். மாலையில் யானை மீது 2 டன் பூக்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பின்னர் அந்த பூக்களை கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெறும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும்

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

மறு பிரதிஷ்டை தினம்: பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கருதப்படும் இந்த ஆலயத்தில், சுவாமி விக்ரகம் மறு பிரதிஷ்டை செய்யப்பட்ட தினமே புஷ்பாஞ்சலி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

மலர் அபிஷேகம்: இந்த விழாவின் போது ஐயப்பனுக்கு சுமார் 2 டன் மலர்களால் மெகா புஷ்பாஞ்சலி (மலர் அபிஷேகம்) செய்யப்படுகிறது. இது தென்னிந்தியாவிலேயே அதிக அளவிலான பூக்களைக் கொண்டு செய்யப்படும் ஒரு வழிபாடாகக் கருதப்படுகிறது.

பக்தர்கள் வருகை: இந்த விழாவில் கேரளா மட்டுமின்றி தமிழகத்தின் தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

கோவில் நடை திறக்கும் நேரம்
புஷ்பாஞ்சலி விழா நாட்களில் வழிபாடுகள் அதிகாலை முதலே தொடங்குகின்றன. பொதுவான கோவில் நேரங்கள்:
காலை: 5:00 AM முதல் 12:00 PM வரை
மாலை: 5:00 PM முதல் 8:00 PM (அல்லது 9:00 PM) வரை

அச்சன்கோவில் ஆலயத்தின் தனித்துவம்

மகா வைத்தியர்: இங்குள்ள ஐயப்பன் விஷப் பூச்சிகள் மற்றும் பாம்பு கடியைக் குணப்படுத்தும் “மகா வைத்தியராக” போற்றப்படுகிறார். சுவாமி சிலையின் வலது உள்ளங்கையில் உள்ள சந்தனம் தீராத நோய்களையும் தீர்க்கும் மருந்தாக நம்பப்படுகிறது.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

குடும்பக் கோலம்: சபரிமலையில் பிரம்மச்சாரியாக இருக்கும் ஐயப்பன், இங்கு தனது மனைவிகளான பூர்ணா மற்றும் புஷ்கலா ஆகியோருடன் குடும்பத்தோடு (கிரகஸ்த வடிவில்) காட்சியளிக்கிறார்.

அமைவிடம்: இது கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இருந்தாலும், தமிழக எல்லைக்கு (செங்கோட்டை) மிக அருகிலேயே (சுமார் 25-30 கி.மீ) அமைந்துள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img