முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.40 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் யேசு ரெத்தினம் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. வேங்கோடு அருட்பணியாளர் பெர்க்மான்ஸ் மைக்கேல் கெனட் மறையுரை வழங்குகிறார். 9-ந் தேதி காலை 6 மணிக்கு அருட்பணியாளர் ஜெரால்டு ஜஸ்டின் தலைமை தாங்கி திருப்பலியும், அருட்பணியாளர் ஜோஸ் ராபின்சன் மறையுரையும் வழங்குகிறார்கள். இரவு 7 மணிக்கு அன்பின் விருந்து நடைபெறுகிறது. 12-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு சகாய அன்னையின் தேர்பவனி நடக்கிறது.
15-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியை அருட்பணி ஜெயக்குமார் தலைமை தாங்கி நிறைவேற்றுகிறார். மாடத்தட்டுவிளை அருட்பணியாளர் ஜெயக்குமார் மறையுரை வழங்குகிறார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார். பொருளாளர் அகஸ்டின் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது.
16-ந் தேதி காலை 9 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட குருகுல முதல்வர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கி சிறப்பு திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்குகிறார். 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீர், இரவு 8 மணிக்கு தூய மரியன்னை இளையோர் இயக்கம் வழங்கும் நடன நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.




