கங்கைகொண்ட சோழபுரத்தில் அன்னாபிஷேகம்! பக்தர்கள் பெருமளவில் பங்கேற்பு!

gangaikondachozhapuram annabhishekam
#image_title

கங்கைகொண்ட சோழபுரத்தில் கோவில்கொண்டு அருள்பாலிக்கும், அருள்மிகு, பிரஹந் நாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு பிரஹதீஸ்வர ஸ்வாமிக்கும், மேலும் சில சிறு கிராம சிவன்கோவில்களுக்கும், காஞ்சி மஹா பெரியவர்களின் அனுக்கிரஹம் மற்றும் வழிகாட்டுதலின்படி அன்னாபிஷேகத் தொண்டு நடைபெற்று வருகிறது. 

1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்புனித அன்னாபிஷேகக் கைங்கர்யம் உலகம் முழுவதும் உள்ள காஞ்சி காமகோடி மடத்தின் பக்தர்களாலும், எங்கும் நிறைந்துள்ள சிவனடியார்களாலும், உள்ளூர் மற்றும் அருகிலுள்ள கிராம மக்களாலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . இளைய தலைமுறை உறுப்பினர்களையும் சேர்த்து, குழு ஒன்று அமைக்கப்பட்டு, கடந்த 38 வருடங்களாக இந்த அன்னாபிஷேகக் கைங்கர்யம், பக்தி சிரத்தையுடன் நடத்தப்பட்டு வருகிறது.

அன்பர்களிடம் இருந்து தேவையான உதவிகளைப் பெற்று, 62 அடி சுற்றளவும் பதிமூன்றரை அடி உயரமும் கொண்டு, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்தப் புனித மஹா சிவலிங்கத்திற்கு முழுவதுமாக அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது. மேலும் ஆண்டு முழுவதும் நடக்க வேண்டிய ஸ்வாமி நைவேத்தியம், மற்றும் சிவ கைங்கர்யங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கங்கை கொண்ட சோழபுரத்தில் பெரியவர்களின் கட்டளைப்படி நடைபெறும் வேதாகம பாடசாலை பராமரிப்பு அன்னாபிஷேகத்தை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உணவிடுதல் ஆகியவையும் இந்த அன்னாபிஷேகக் கமிட்டியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. 

சோபக்ருது வருஷம், ஐப்பசி மாதம் 11ம்  நாள், சனிக்கிழமை, அக்.28ம் தேதி, அஸ்வினி நட்சத்திரம் கூடிய பௌர்ணமியில், 39ம் வருஷ அன்னாபிஷேகம்  நடைபெறுகிறது.  அக்.28,29 ஆம் தேதிகளில், அதாவது வரும் சனி, ஞாயிறு இரவு சந்திர கிரஹணம் 1 மணி 5 நிமிடத்திற்கு ஆரம்பிப்பதால் , ஆகம விதிகளின்படி மஹா தீபாராதனை மாலை 5 மணிக்கு இந்த வருடம் மாற்றப்பட்டுள்ளது. இந்த சோபக்ருது  வருட பூஜை ஏற்பாடுகளின்படி, அக்.26ம் தேதி, வியாழக்கிழமை காலை 8 மணிக்கு  ஸ்ரீ கணக்கு விநாயக ஸ்வாமிக்கு ஹோமம் , அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. 

அக்.27, வெள்ளி, காலை 9 மணிக்கு பிரஹந்நாயகி அம்பாளுக்கும் ப்ரஹதீஸ்வர ஸ்வாமிக்கும், துர்கை மங்களசண்டி தேவிக்கும், மஹா அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 1 மணி அளவில், நைவேத்திய பிரசாத விநியோகம் நடைபெற்றது.  மாலை, குபேர லட்சுமி திருவிளக்கு பூஜை, நவாவரண பூஜை நடைபெற்றது. 

அக்.28 இன்று காலை 9 மணிக்கு முன் தொடங்கி,  ப்ரஹதீஸ்வர ஸ்வாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.  இன்று மாலை 5 மணிக்கு மஹா தீபாராதனையும் இரவு ஸ்வாமி அன்னத்தைக் கலைத்து பக்தர்களுக்கு அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டது.

அக்.29 ஞாயிறு நாளை, உத்ராபிஷேகம் காலை 9 மணி அளவில், ஸ்வாமிக்கு நடைபெறும். பின்  சண்டிகேஸ்வர பூஜையுடன் பிரசாத விநியோகம் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories