பூந்தானத்தின் பூக் குழந்தை!

poonthanam - 2026

அருமையான ஓவியம்! வரைந்தவரின் பெயர் : அபிலாஷ் நாராயணன்.

இந்த படத்தில் ஸ்ரீகிருஷ்ணனைப் பற்றி க்ருதி எழுதிக்கொண்டிருப்பவர். ஸ்ரீகுருவாயூரப்பனின் பரம பக்தனான பூந்தானம் நம்பூதிரி.

பூந்தானம் என்பது அவரது இல்லத்துப்பெயர் (கேரளத்தில் நம்பூதிரி ப்ராஹ்மணர்களின் குடிகளை இல்லங்களால் identify செய்வர், ஒவ்வொரு நம்பூதிரி குடம்பமும் ஒரு இல்லம் அல்லது மனையை சேர்ந்தவர்களாக இருப்பர் ) அவரது இயற்ப்பெயர் யாருக்குமே தெரியாது.

பூந்தானமும் ஸமான்ய மனிதனைப்போலவே வாழ்வை தொடங்கினார். திருமணம் நடந்தேறியது. திருமணம் கழித்து நெடுநாள்களாகியும் குழந்தை இல்லை. ஸ்ரீ கிருஷ்ணன் அருளால் ஒரு குழந்தை பிறந்தது.

சந்தோஷத்தில் திளைத்தார் பூந்தானம், தன் குழந்தையின் சோறுண்ணல்(அன்ன ப்ராசனம்) நிகழ்வை வெகு விமரிசையாக நடத்தினார். பல பந்துக்களை அழைத்து மகிழ்ந்தார். ஆனால் அந்த கண்ணனின் எண்ணம் வேறாயிருந்தது. தவழ்ந்து மகிழ்ந்து கொண்டிருந்த பிஞ்சு மேலிருந்து கீழிருந்த தொட்டியில் விழுந்து மாய்ந்தது.

தவமாய் தவமிருந்து பெற்றதை அவனே எடுத்துக்கொண்டான். துக்கம் தாளாமல் கலங்கினார். உலக வாழ்வை வெறுத்திருந்த அவரின் மேல் அந்த முகில்வண்ணனுக்கு கருணை பிறந்தது.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

புல்லாய், பூவாய்,மரமாய் பல்மிருகமாய், பறவையாய்,பேயாய் எத்தனை பிறவிகளாய் இறைவனை எண்ணி தேடினாரோ அதற்கெலாம் பயனாய் பூந்தானத்திற்கு அப்பிறவி அமைந்தது.

மகவையிழந்த பின்னர், அந்த குருவாயுபுரத்திலே மம்மியூர் ஸ்ரீ ஶிவபெருமானோடு அமர்ந்திருந்த மாறாக்குழந்தையாம் ஸ்ரீ குருவாயுரப்பனை தர்சனம் பண்ணினார். அவருக்கு அடைந்த பரமானந்தம் அளவற்றதாய் இருந்தது. அன்றுமுதல் அந்த அப்பனே கதி என்றானார்.

உண்ணும் போதும் உறங்கும் போது உண்ணிக் கண்ணனே உறைந்தான். பகவான் பகவத் கீதையில் கூறும் பக்தியோகத்தில் திளைக்கத் துவங்கினார்.

பக்தி யோகியானார். ஸதா ஸர்வ காலமும் பகவத்ஸ்மரணையில் ஆழ்ந்தார். பக்திபெருகிவழியும்போது எந்தவொரு மஹானுக்கும் பிறக்கும் பக்திமாலைகள் இவர் திருவாயில் இருந்தும் துளிர்த்து.

அவர் பக்தி எந்த அளவுக்கு முற்றியதென்றால் தன்னுடைய விரசிதங்களில் அவர் கூறுகிறார்

” உண்ணி கண்ணன் என் மனத்தே ஆடும் போல் என் முன்னே வேண்டுமோ ஒரு மகன்”

என்று பொருள்பட மலையாளத்தில் பாடுகிறார்.

ஜெயந்த் ராமகிருஷ்ணன் 

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories