பாஜக., வேல்யாத்திரை முடிந்ததும்… திருச்செந்தூர் கடற்கரையை திறந்துவிட்ட தமிழக அரசு!

tiruchendur
tiruchendur

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கோவிலில் கடந்த மார்ச் மாதம் 20-ஆம் தேதியில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் 9 மாதங்களுக்கு பின் திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று பிற்பகல் 12 மணி முதல் கடலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

இதை அடுத்து, கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மகிழ்ச்சியோடு கடற்கரையில் புனித நீராடினர்.

கடலில் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டாலும், நாழிக் கிணற்றில் பக்தர்கள் புனித நீராட தடை தொடர்வதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது!

பாஜக., நடத்திய வேல் யாத்திரையின் போது, கொரோனா காரணம் காட்டி, கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறி, வேல் யாத்திரைக்கு பல்வேறு தடைகளை விதித்த தமிழக அரசு, வேல் யாத்திரை முடிந்த மறு வாரமே கூட்டங்கள் கூடுவதற்கும், அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், திருச்செந்தூர் கடற்கரையில் பொதுமக்கள் கூடவும் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

பாஜக., நடத்திய வேல் யாத்திரை நிறைவுற்ற ஒரு வாரத்தில் கொரோனா அச்சம் அரசால் விலக்கப் பட்டுள்ளதும், கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்காக கொரானாவே தமிழகத்தில் இருந்து அரசால் துரத்தப் பட்டுள்ளதும் மெய்சிலிர்க்கும் அதிசயங்களாகவே பார்க்கப் படுகின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories