ஆழ்வார்கள் பன்னிருவர்: ஓர் அறிமுகம்

1. பொய்கையாழ்வார்

ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை

ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்!  – எப்புவியும்

பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்

தேசுடனே தோன்று சிறப்பால்.

 

அவதரித்த ஊர்:  திருவெஃகா (காஞ்சிபுரம்)

மாதம்:  ஐப்பசி

நட்சத்திரம்:  திருவோணம்

அம்சம்:  பாஞ்சஜன்யம் (சங்கு)

அருளிச் செய்த பிரபந்தம்:  முதல் திருவந்தாதி

 

***

2.  பூதத்தாழ்வார்

எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர்

வண்மை மிகு கச்சி மல்லை மாமயிலை  – மண்ணியில் நீர்

தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்

ஓங்குமுறையூர் பாணனூர்.

.

அவதரித்த ஊர் : திருக்கடல்மல்லை (மகாபலிபுரம்)

மாதம்: ஐப்பசி

நட்சத்திரம்: அவிட்டம்

அம்சம்: கதாயுதம்

அருளிச் செய்த பிரபந்தம்: இரண்டாம் திருவந்தாதி.

***

3.  பேயாழ்வார்

மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து

நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த – பெற்றிமையோர்

என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு

நின்றது உலகத்தே நிகழ்ந்து.

 

அவதரித்த ஊர்:  திருமயிலை (மயிலாப்பூர்)

மாதம்: ஐப்பசி

நட்சத்திரம்:  சதயம்

அம்சம்: நந்தகம் (வாள்)

அருளிச் செய்த பிரபந்தம்: மூன்றாம் திருவந்தாதி.

***

4. திருமழிசையாழ்வார்

தையில் மகம் இன்று தாரணியீர்! ஏற்றம் இந்தத்

தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன்  – துய்ய மதி

பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று

நற்றவர்கள் கொண்டாடும் நாள்.

 

அவதரித்த ஊர்:  திருமழிசை

மாதம்: தை

நட்சத்திரம்: மகம்

அம்சம்: ஸ்ரீசக்ரம்

அருளிச் செய்த பிரபந்தங்கள் : நான்முகன் திருவந்தாதி,  திருச்சந்த விருத்தம்.

 ***

5.  நம்மாழ்வார்

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை

பாரோர் அறியப் பகர்கின்றேன்  – சீராரும்

வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை

நாதன் அவதரித்த நாள்.

 

அவதரித்த ஊர்:  திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)

மாதம்: வைகாசி

நட்சத்திரம்:  விசாகம்

அம்சம்:  சேனை முதலியார்

அருளிச் செய்த பிரபந்தங்கள்:   திருவிருத்தம்,  திருவாசிரியம்,  பெரிய திருவந்தாதி,  திருவாய்மொழி.

 ***

6.  மதுரகவியாழ்வார் :

ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்து உதித்த

சீராரும் சித்திரையில் சித்திரை நாள் – பாருலகில்

மற்றுள்ள ஆழ்வார்கள் வந்து உதித்த நாள்களிலும்

உற்றது எமக்கு என்று நெஞ்சே ! ஓர்.

 

அவதரித்த ஊர்:  திருக்கோளூர்

மாதம்:  சித்திரை

நட்சத்திரம்:  சித்திரை

அம்சம்:  குமுத, வைநதேயம்

அருளிச் செய்த பிரபந்தம்:  கண்ணிநுண்சிறுத்தாம்பு.

***

7.  குலசேகராழ்வார்

மாசிப் புனர்ப்பூசம் காண்மின் இன்று மண்ணுலகீர்

தேசு இத்திவசுத்துக்கு ஏது என்னில்  – பேசுகின்றேன்

கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால்

நல்லவர்கள் கொண்டாடும் நாள்.

 

அவதரித்த ஊர்:  திருவஞ்சிக்களம்

மாதம்:  மாசி

நட்சத்திரம்:  புனர்ப்பூசம்

அம்சம்: கௌஸ்துபம்

அருளிச் செய்த பிரபந்தம்: பெருமாள் திருமொழி.

***

8.  பெரியாழ்வார்

இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே !

இன்றைக்கு என்ன ஏற்றம் எனில் உரைக்கேன்  – நன்றிபுனை

பல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்த

நல் ஆனியில் சோதி நாள்.

 

அவதரித்த ஊர்:  ஸ்ரீவில்லிபுத்தூர்

மாதம்: ஆனி

நட்சத்திரம்: சுவாதி

அம்சம்: கருடன்

அருளிச் செய்த பிரபந்தம்:  பெரியாழ்வார் திருமொழி.

***

9. ஆண்டாள்

இன்றோ திருவாடிப் பூரம்  எமக்காக

அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத

வாழ்வான வைகுந்தவான் போகம் தன்னை இகழ்ந்து

ஆழ்வார் திருமகளா ராய்

 

அவதரித்த ஊர்:  ஸ்ரீவில்லிபுத்தூர்

மாதம்: ஆடி

நட்சத்திரம்: பூரம்

அம்சம்: பூதேவி

அருளிச் செய்த பிரபந்தங்கள் :  திருப்பாவை,  நாச்சியார் திருமொழி.

***

 10.  தொண்டரடிப்பொடியாழ்வார்

மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மாநிலத்தீர்

என் இதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் – துன்னு புகழ்

மாமறையோன் தொண்டரப்பொடியாழ்வார் பிறப்பால்

நான்மறையோர் கொண்டாடும் நாள்.

 

அவதரித்த ஊர்:  திருமண்டங்குடி

மாதம்:  மார்கழி

நட்சத்திரம்:  கேட்டை

அம்சம்:  வநமாலா.

அருளிச் செய்த பிரபந்தங்கள்:  திருப்பள்ளியெழுச்சி, திருமாலை.

***

11.  திருப்பாணாழ்வார்

கார்த்திகையில் உரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர்!

வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால்  – ஆத்தியர்கள்

அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதற்பின்

நன்குடனே கொண்டாடும் நாள்.

 

அவதரித்த ஊர்:  உறையூர்

மாதம்:  கார்த்திகை

நட்சத்திரம்:  ரோஹிணி

அம்சம்:  ஸ்ரீவத்ஸம்

அருளிச் செய்த பிரபந்தம்:  அமலனாதிபிரான்.

***

12. திருமங்கையாழ்வார்

பேதை நெஞ்சே! இன்றைப் பெருமை அறிந்திலையோ

ஏது பெருமை இன்றைக்கு என்ன என்னில் – ஓதுகின்றேன்

வாய்த்த புகழ் மங்கையர் கோன் மாநிலத்தில் வந்துதித்த

கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்.

 

அவதரித்த ஊர்:  திருவாலி திருநகரி

மாதம்: கார்த்திகை

நட்சத்திரம்: கார்த்திகை

அம்சம்: சாரங்கம் (வில்)

அருளிச் செய்த பிரபந்தங்கள்:  பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம்,  திருநெடுந்தாண்டகம்,  சிறிய திருமடல்,  பெரிய திருமடல்,  திருவெழுகூற்றிருக்கை.

***

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்?

அருளிச் செயலை அறிவார் ஆர் ? – அருள் பெற்ற

நாதமுனி முதலான நம் தேசிகரை அல்லால்

பேதை மனமே ! உண்டோ பேசு.

.

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி

தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்

உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி

செய்ய மறை தன்னுடனே சேர்ந்து.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories