திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சலுகை விலை லட்டுகளை விரைவில் ரத்து செய்யும் வகையில், முதல்கட்டமாக அனைத்து பக்தர்களுக்கும் வைகுண்ட ஏகாதசி முதல் (ஜனவரி 6) ஒரு லட்டு இலவசமாக வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இலவச தரிசனத்திலும், மலைப்பாதையில் பாதயாத்திரையாக நடந்து வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்று வரும் பக்தர்களுக்கு மட்டும் இலவசமாக ஒரு லட்டும், சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சலுகை விலையிலான லட்டுகளை விரைவில் ரத்து செய்யும் வகையில், சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தலா ஒரு இலவச லட்டு வழங்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.