பூமிபூஜையுடன் நின்றுபோன திருச்செந்தூர் விருந்தினர் மாளிகை: பொதுமக்கள் புகார்

THERUCHANTHUR - 2026

திருச்செந்தூரில் கர்நாடக அரசு சார்பில் ரூ5 கோடியில் புதிய விருந்தினர் கூடம் கட்டுவதற்கான திட்டம் பூமி பூஜையுடன் நின்றுபோனது. இது விரைவில் கட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாகவும், சூரனை சம்ஹாரம் செய்த தலமாகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது.

வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் இங்கு திருவிழாக்கள் களைகட்டும். எழில் கொஞ்சும் கடற்கரையுடன் கோயில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா வந்தும் மனம் மகிழ்கின்றனர்.

வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக இங்கு கோயில் நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. தனியாருக்கு சொந்தமான சிறப்பு விருந்தினர் மாளிகையும் உள்ளது.

இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வந்த அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கர்நாடக அரசு சார்பில் திருச்செந்தூரில் ரூ5 கோடியில் புதிய விருந்தினர் மாளிகை கட்டப்படும் என அறிவித்தார்.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

இதையடுத்து தற்போது வேலையா குடில் இருக்கும் இடத்தில் புதிய விருந்தினர் மாளிகை கட்டுவதற்கான பூமி பூஜையும் நடந்தது.

அத்துடன் வேலையா குடிலை இடித்து அப்புறப்படுத்தும் பொருட்டு அதன் அருகே அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. அதில், ‘‘‘கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளதால் இடித்து அப்புறப்படுத்தப்பட உள்ளது. எனவே இதன் அருகே யாரும் செல்ல வேண்டாம்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து சித்தராமையா முதல்வரானார்.

இதனால் திருச்செந்தூரில் எடியூரப்பா பூமி பூஜை நடத்திய விருந்தினர் மாளிகை திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ பெரும்பான்மை பெற்றபோதும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணியால் குமாரசாமி முதல்வராகப் பதவியேற்றார்.

குமாரசாமியும், அவரது தந்தையான முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் முருக பக்தர்கள் என்பதால் ஆண்டுக்கு ஒன்று அல்லது இருமுறை திருச்செந்தூர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். எனவே, திருச்செந்தூரில் கர்நாடக அரசு சார்பில் புதிய விருந்தினர் கூடம் கட்ட திட்டமிடப்பட்டு பூமிபூஜையுடன் நிற்கும் பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என்பதே பக்தர்கள் உள்ளிட்ட அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories