பூமிபூஜையுடன் நின்றுபோன திருச்செந்தூர் விருந்தினர் மாளிகை: பொதுமக்கள் புகார்

THERUCHANTHUR - 2026

திருச்செந்தூரில் கர்நாடக அரசு சார்பில் ரூ5 கோடியில் புதிய விருந்தினர் கூடம் கட்டுவதற்கான திட்டம் பூமி பூஜையுடன் நின்றுபோனது. இது விரைவில் கட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாகவும், சூரனை சம்ஹாரம் செய்த தலமாகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது.

வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் இங்கு திருவிழாக்கள் களைகட்டும். எழில் கொஞ்சும் கடற்கரையுடன் கோயில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா வந்தும் மனம் மகிழ்கின்றனர்.

வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக இங்கு கோயில் நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. தனியாருக்கு சொந்தமான சிறப்பு விருந்தினர் மாளிகையும் உள்ளது.

இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வந்த அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கர்நாடக அரசு சார்பில் திருச்செந்தூரில் ரூ5 கோடியில் புதிய விருந்தினர் மாளிகை கட்டப்படும் என அறிவித்தார்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

இதையடுத்து தற்போது வேலையா குடில் இருக்கும் இடத்தில் புதிய விருந்தினர் மாளிகை கட்டுவதற்கான பூமி பூஜையும் நடந்தது.

அத்துடன் வேலையா குடிலை இடித்து அப்புறப்படுத்தும் பொருட்டு அதன் அருகே அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. அதில், ‘‘‘கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளதால் இடித்து அப்புறப்படுத்தப்பட உள்ளது. எனவே இதன் அருகே யாரும் செல்ல வேண்டாம்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து சித்தராமையா முதல்வரானார்.

இதனால் திருச்செந்தூரில் எடியூரப்பா பூமி பூஜை நடத்திய விருந்தினர் மாளிகை திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ பெரும்பான்மை பெற்றபோதும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணியால் குமாரசாமி முதல்வராகப் பதவியேற்றார்.

குமாரசாமியும், அவரது தந்தையான முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் முருக பக்தர்கள் என்பதால் ஆண்டுக்கு ஒன்று அல்லது இருமுறை திருச்செந்தூர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். எனவே, திருச்செந்தூரில் கர்நாடக அரசு சார்பில் புதிய விருந்தினர் கூடம் கட்ட திட்டமிடப்பட்டு பூமிபூஜையுடன் நிற்கும் பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என்பதே பக்தர்கள் உள்ளிட்ட அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories