தோனி, கெயில் போல வலு கிடையாது: மனம் திறந்த ரோஹித்

இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமெடுத்த ரோஹித் சர்மா, எனக்கு தோனி அல்லது கெயில் போல வலு கிடையாது என்று கூறியுள்ளார்.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

கேப்டன் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார். முதலில் 126 பந்துகளில் 116 ரன்கள் குவித்த ரோஹித், கடைசி 27 பந்துகளில் 92 ரன்கள் (11 சிக்ஸ், 3 பவுண்டரி) குவித்தார்.

இது ரோஹித் சர்மாவின் 3-வது இரட்டைச் சதம். ஒருநாள் போட்டியின் சரித்திரத்தில் இதுவரை எந்தவொரு வீரரும் 3 இரட்டைச் சதங்களை எடுத்ததில்லை.

2-வது ஒருநாள் போட்டி முடிவடைந்தபிறகு ரோஹித் சர்மாவை இந்தியப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி கண்டார்.

அப்போது ரோஹித் சர்மா கூறியதாவது:

அவர்களாக என்னை ஆட்டமிழக்காமல் நானாக அவுட் ஆகக் கூடாது, தவறு செய்யாமல் விளையாடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இறுதி வரை விளையாடவேண்டும் என எண்ணினேன்.

ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்ததாக இருந்தது. அதைப் பயன்படுத்த தயாராக இருந்தேன்.

மூன்று இரட்டைச் சதங்களில் எது சிறந்தது எனத் தேர்வு செய்வது கடினம். மூன்றும் முக்கியமான தருணங்கள் எடுத்த இரட்டைச் சதங்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்த இரட்சைச் சதம், அந்தத் தொடரின் கடைசிப் போட்டி. ஜெயிக்கும் அணி தொடரை வெல்லும்.

இலங்கைக்கு எதிராக எடுத்த 264 ரன்கள், மூன்று மாத காயத்தில் உண்டான ஓய்வுக்குப் பிறகு எடுத்தது.

என்னால் மீண்டும் பெரிதாக ரன்கள் எடுக்கமுடியுமா என்கிற தடுமாற்றத்தில் அப்போது நான் இருந்தேன்.

இப்போது, முதல் ஒருநாள் போட்டியில் தோற்ற பிறகு இந்தப் போட்டியில் ஜெயித்தாக வேண்டிய கட்டாயம்.

நானும் தவனும் மாறி மாறி ரன் எடுக்கவேண்டும் என முடிவு செய்திருந்தோம்.

ஒரு பேட்ஸ்மேனுக்கு ஒரு பந்துவீச்சாளர் தொடர்ந்து ஆறு பந்துகளை வீசக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அதனால் நல்ல தொடக்கம் கிடைத்தது.

என்னுடைய பலம், டைமிங். தோனி, கெய்ல் அளவுக்கு என்னிடம் சக்தி கிடையாது சரியான டைமிங்கில் அடித்து ரன் எடுப்பதுதான் என் பாணி. அதைத்தான் செய்தேன் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories