December 5, 2025, 10:04 PM
26.6 C
Chennai

கட்டணம் உயர்ந்தது! 15 சுங்கச்சாவடி அதிரடி!

sunga savadi - 2025

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளும், தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த சுங்கச்சாவடிகளில் பெரும்பாலானவை 1992-ம் ஆண்டில் அமைக்கப்பட்டவை. மீதமுள்ள சுங்கச்சாவடிகள் 2008-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டவை. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஒப்பந்தப்படி வருடத்துக்கு ஒருமுறை சுங்கச்சாவடியில் பயனாளர் கட்டணத்தை அதிகபட்சமாக 10 சதவீதம் உயர்த்திக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அதன்படி 1992-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், 2008-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் உயர்த்தி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 1992-ம் ஆண்டை சேர்ந்த சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அடங்கின.

sunga savadi 1 - 2025

இந்தநிலையில் செப்டம்பர் மாதம் பிறந்ததை தொடர்ந்து 2008-ம் ஆண்டை சேர்ந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008-ன்படி, தமிழகத்தில் உள்ள 15 சுங்கச்சாவடிகளில் நேற்று கட்டணம் உயர்ந்துள்ளது. 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 46 சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் உள்ள 15 சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்ட தொகையின் படி ரூ.5 முதல் 15 வரை அதிகமாக செலுத்த வேண்டும்.

பாளையம் (கிரு‌‌ஷ்ணகிரி-தோப்பூர் சாலை), நல்லூர் (சென்னை-தடா), வைகுந்தம் (சேலம்-குமாரபாளையம்), எலியார்பத்தி (மதுரை-தூத்துக்குடி), கொடைரோடு (திண்டுக்கல்-சமயநல்லூர்), மேட்டுப்பட்டி (சேலம்-உளுந்தூர்பேட்டை), மண்வாசி (திருச்சி-கரூர்), விக்கிரவாண்டி (திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை), பொன்னம்பலப்பட்டி (திருச்சி-திண்டுக்கல்), நத்தக்கரை (சேலம்-உளுந்தூர்பேட்டை), புதூர் பாண்டியபுரம் (தூத்துக்குடி-மதுரை), திருமந்ததுரை (உளுந்தூர்பேட்டை-பாடலூர்), வாழவந்தான் கோட்டை (திருச்சி-தஞ்சை), வீரசோழபுரம் (சேலம்-உளுந்தூர்பேட்டை), விஜயமங்கலம் (குமாரபாளையம்-செங்கம்பள்ளி).

sunga saavadi 2 - 2025

இதன்படி 52 கி.மீ. தூரத்துக்குள் பயணிக்கும் கார், ஜீப், வேன் போன்ற இலகுரக வாகனங்களுக்கு ஒருமுறை சென்றுவரை ரூ.60 கட்டணமாக விதிக்கப்பட்டு இருக்கிறது. இலகுரக சரக்கு வாகனங்கள், சிற்றுந்து ஆகியவற்றுக்கு ரூ.95 கட்டணமாகவும், லாரி-பஸ்கள் போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.195 கட்டணமாகவும், கட்டுமானத்துக்கு பயன்படும் மிகப்பெரிய கனரக வாகனங்களுக்கு ரூ.305 கட்டணமாகவும் விதிக்கப்பட்டு இருக்கிறது.கட்டண உயர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்.1) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடி கட்டண விபரம்.

கார், ஜீப், வேன் போன்ற இலகுரக வாகனங்கள்- ரூ.50 (ரூ.49), மினி பஸ்கள், இலகுரக வர்த்தக மற்றும் சரக்கு வாகனங்கள் – ரூ.90 (ரூ.84), 2 அச்சு கொண்ட லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் – ரூ.175 (ரூ.168), 3 அச்சுகள் முதல் வர்த்தகம் சார்ந்த மிகப்பெரிய கனரக வாகனங்கள் – ரூ.285 (ரூ.269).

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories