திருமணமாகி 5 மாதம் ஆன பள்ளி மாணவி தற்கொலை!

love - 2026

கள்ளக்குறிச்சி எஸ் ஓகையூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜமாணிக்கம். இவரது மனைவி கருப்பாயி. இவர்களுக்கு அன்பு என்ற மகள் உள்ளார்.

அவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தநிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஜெகதீஸ் என்பவருடன் கட்டாய திருமணம் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து ஒரு வாரத்திலேயே ஜெகதீசன் சிங்கப்பூர் சென்று விட்ட நிலையில் அன்பு தனது தாய் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அன்பு வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

poison 1 - 2026

ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் அன்புவுடன் பள்ளியில் படிக்கும் அவரது பக்கத்து வீட்டு பெண், தீனா என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த பெண் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். இந்நிலையில் அன்பு அவர்களது காதலுக்கு உதவ முன் வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்பு தனது மற்ற தோழிகளை அழைத்துக் கொண்டு வெள்ளிமலை கோவிலில் காதல் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளார்.

anbu - 2026

திருமணமான ஜோடிகள் தலைமறைவாகிய நிலையில் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் அன்புவின் பக்கத்து வீட்டு தோழியின் தந்தை அன்புவிடம் விசாரித்துள்ளார்.

இதனையடுத்து அவரது மகளும், அன்பும் பள்ளியில் இருந்து பாதியிலேயே புறப்பட்டது தெரியவந்தது. தோழியின் தந்தை கேசவன் எனது மகள் உன்னுடன் தான் வந்துள்ளார். அவளைக் காணவில்லை.

காவல்நிலையத்தில் புகார் செய்யப் போகிறேன் என கூறியுள்ளார். இதனை கேட்டு அச்சமடைந்த அன்பு பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்ததுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories