21-03-2023 12:22 PM
More
    Homeதமிழகம்அம்மா தாயே ஓட்டுப் போடுங்க.. பிச்சைக்காரராக பிரசாரம் செய்த வேட்பாளருக்கு கொலை மிரட்டல்!

    To Read in other Indian Languages…

    அம்மா தாயே ஓட்டுப் போடுங்க.. பிச்சைக்காரராக பிரசாரம் செய்த வேட்பாளருக்கு கொலை மிரட்டல்!

    thiruvodu - Dhinasari Tamil

    தருமபுரியில் பிச்சைக்காரர் வேடம் போட்டு வேட்பு மனு தாக்கல் செய்து, தேர்தல் பிரசாரம் செய்து வரும் வேட்பாளரை சக வேட்பாளர்கள் மிரட்டியதால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறையிடம் மனு கொடுத்துள்ளார்.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள எச்சனஹள்ளி ஊராட்சி மன்றத் தேர்தல் தலைவர் பதவிக்கு முனி ஆறுமுகம் என்பவர் போட்டியிடுகிறார்.

    மற்ற வேட்பாளர்களைக் காட்டிலும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அவர், பிச்சைக்காரர் வேடம் போட்டு வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் அளிக்கும் தவறான முறை பற்றி பிரசாரம் செய்தபடி பிச்சை எடுத்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும், அதே வேடத்தில் வீடு வீடாக சென்று தன்னை தேர்ந்தெடுக்கும்படி பிரசாரம் செய்து வருகிறார்.

    election 1 - Dhinasari Tamil

    இவரது பிச்சைக்காரர் வேடம் வேலை செய்ய ஆரம்பித்தது. மீடியாக்களில் இவரைப் பற்றி செய்தி வெளியானது.

    இதனால், அந்த ஊராட்சி பகுதியில் அனைவருக்கும் தெரிந்தவர் ஆனார். இதனால், எரிச்சலடைந்த மற்ற வேட்பாளர்கள் இவர் மீது கடுப்பில் உள்ளனர். இந்தநிலையில் பிச்சைக்காரர் வேடத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவரை, மற்ற இரண்டு வேட்பாளர்கள் வழிமறித்து மிரட்டியுள்ளனர்.

    பிச்சைக்காரன் வேஷம் போட்டு வாக்கு சேகரித்தால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், போன் மூலமாகவும் இவருக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறதாம்.

    election - Dhinasari Tamil

    இதனால், தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி பென்னாகரம் காவல்துறை மற்றும் பென்னாகரம் பகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்தார். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளிக்க வந்தார். ஆனால், அவரை அதிகாரியை சந்திக்க காவல்துறையினர்அனுமதிக்கவில்லை.

    இதனால், அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் புகார் மனுவை அளிக்க அனுமதிக்கப்பட்டது.

    பிச்சைக்காரர் வேடம் அணிந்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பாளர் ஒருவர் தகராறு செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    twenty + 2 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,628FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...