அம்மா தாயே ஓட்டுப் போடுங்க.. பிச்சைக்காரராக பிரசாரம் செய்த வேட்பாளருக்கு கொலை மிரட்டல்!

thiruvodu - 2026

தருமபுரியில் பிச்சைக்காரர் வேடம் போட்டு வேட்பு மனு தாக்கல் செய்து, தேர்தல் பிரசாரம் செய்து வரும் வேட்பாளரை சக வேட்பாளர்கள் மிரட்டியதால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறையிடம் மனு கொடுத்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள எச்சனஹள்ளி ஊராட்சி மன்றத் தேர்தல் தலைவர் பதவிக்கு முனி ஆறுமுகம் என்பவர் போட்டியிடுகிறார்.

மற்ற வேட்பாளர்களைக் காட்டிலும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அவர், பிச்சைக்காரர் வேடம் போட்டு வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் அளிக்கும் தவறான முறை பற்றி பிரசாரம் செய்தபடி பிச்சை எடுத்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும், அதே வேடத்தில் வீடு வீடாக சென்று தன்னை தேர்ந்தெடுக்கும்படி பிரசாரம் செய்து வருகிறார்.

election 1 - 2026

இவரது பிச்சைக்காரர் வேடம் வேலை செய்ய ஆரம்பித்தது. மீடியாக்களில் இவரைப் பற்றி செய்தி வெளியானது.

இதனால், அந்த ஊராட்சி பகுதியில் அனைவருக்கும் தெரிந்தவர் ஆனார். இதனால், எரிச்சலடைந்த மற்ற வேட்பாளர்கள் இவர் மீது கடுப்பில் உள்ளனர். இந்தநிலையில் பிச்சைக்காரர் வேடத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவரை, மற்ற இரண்டு வேட்பாளர்கள் வழிமறித்து மிரட்டியுள்ளனர்.

பிச்சைக்காரன் வேஷம் போட்டு வாக்கு சேகரித்தால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், போன் மூலமாகவும் இவருக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறதாம்.

election - 2026

இதனால், தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி பென்னாகரம் காவல்துறை மற்றும் பென்னாகரம் பகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்தார். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளிக்க வந்தார். ஆனால், அவரை அதிகாரியை சந்திக்க காவல்துறையினர்அனுமதிக்கவில்லை.

இதனால், அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் புகார் மனுவை அளிக்க அனுமதிக்கப்பட்டது.

பிச்சைக்காரர் வேடம் அணிந்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பாளர் ஒருவர் தகராறு செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories