வேதத்தை அடிப்படையாகக் கொண்டது இந்து மதம்: துணை முதல்வர் ஓபிஎஸ்!

ops - 2026

இந்து மதத்தின் அடிப்படையே வேதம் என்றும்,அது தெய்வீகம் நிறைந்தது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்தார்.

இதற்காக இன்று காலை 7 மணிக்கு துணை முதல்வர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வருகை தந்தார். அவரை நிர்வாக அதிகாரி இளங்கோவன் தலைமையில் கோயில் அர்ச்சகர்கள் ஊழியர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். ஆண்டாள் கோயிலில் காலை விஸ்வரூப தரிசனம் முடிவடைந்த பின்னர் நடைபெற்ற முதல் காலை பூஜையில் பங்கேற்று அவர் சுவாமி தரிசனம் செய்தார்.

சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள ஆண்டாள் பிறந்த நந்தவனம் சக்கரத்தாழ்வார் சன்னதி பெரிய பெருமாள் சன்னதிக்கும் சென்று தரிசனம் செய்தார்.

கோயிலுக்குள் வரும்போது ஆண்டாள் கோவில் நுழைவு வாயிலில் இருந்த கோயில் யானை ஜெயமால்யதாவிற்கு பழங்கள் கொடுத்தார்.

ஆண்டாள் கோயில் தரிசனத்தை முடித்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள அவரது குல தெய்வமான பேச்சியம்மனை வழிபடச் சென்றார் பின்னர் அங்கு சென்று பேச்சியம்மனை வழிபட்டார்.

ஆண்டாள் கோயில் தரிசனம், குல தெய்வம் கோயிலில் வழிபாடு ஆகியனவற்றை முடித்துக் கொண்டு ராஜபாளையம் சென்றார்.

அங்கு ராம்கோ நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டடுள்ள ஸ்ரீ சிருங்கேரி சாராதம்பாள் கோயிலில் ஸ்ரீ பாரதி தீர்த்த மஹான் சுவாமிகளின் 70-வது வர்தந்தி மஹோத்ஸவம் தினம் (பிறந்த நாள்) முன்னிட்டு வேதம் பயிலும் மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.

அதில் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ராம்கோ சேர்மன்.வெங்கட்ராம ராஜா ஆகியோர் கலந்து கொன்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய துணை முதல்வ, “இந்து மதத்தின் அடிப்படை வேதம். அதுதெய்வீகம் நிறைந்தது. வேதம் கடல் போன்றது. அதைக் கற்பது அவ்வளவு எளிதானது அல்ல. அது ஒரு கலை. கற்கும் வேதத்தை சிரத்தையுடன் கற்று பாதுகாக்க வேண்டும் எனப் பேசினார்.

பின்னர், சம்ஸ்கிருத மொழியில் அகில இந்திய அளவில் தங்கப் பதக்கம் வென்ற மாணவனைப் பாராட்டி நினைவுப் பரிசை வழங்கினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories