உறவுக்கு மறுத்த பெண்ணை கழுத்தை அறுத்த கயவர்கள்!

north indians - 2026

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் ஆகா‌ஷ். இவருக்கு வயது 27. இவரது மனைவி வந்தனா. இவருக்கு வயது 25. இத்தம்பதிக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது.

ஆகா‌ஷின் உறவினரான சிறுவன் சன்னிக்கு 16 வயதாகிறது.. இவர்கள் எல்லாரும் சேலம் மாவட்டம் இரும்பாலை அருகே பெருமாம்பட்டி கிலான் வட்டம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

அதே பகுதியில் ஒரு வெள்ளிப்பட்டறையில் ஆகாஷ், வந்தனா, சன்னி ஆகியோர் கூலித்தொழிலாளர்களாகவும் வேலை செய்து வந்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஆகா‌ஷ், வந்தனா, சன்னி ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

dead body - 2026

பிறகு நடுராத்திரி குழந்தை ரொம்ப நேரமாக அழும் சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கம் வசித்தவர்கள் ஆகாஷ் வீட்டுக்கு சென்று பார்த்தனர். வந்தனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.

வீட்டுக்கு பின்புறம், ஆகாஷும், சன்னியும் கழுத்து அறுபட்டு அவர்களும் ரத்த வெள்ளத்ல் கிடந்தனர். இதை பார்த்து அலறிய பொதுமக்கள் உடனடியாக இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

விரைந்து வந்த போலீசார் 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த சமயத்தில்தான், அதே பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 4 இளைஞர்களும் மாயமானது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான் விழுந்தது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவையும் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த 4 இளைஞர்கள் தப்பி ஓடுவது தெரிந்தது.. அநேகமாக அவர்கள்தான் இந்த 3 கொலைகளையும் செய்திருக்கலாம் என்று போலீசார் முடிவு செய்து அவர்களை தேடும் வேலையில் ஈடுபட்டனர்.

இந்த கும்பல், இதே பகுதியில்தான் 5 வருஷத்துக்கு முன்பு தங்கி இருந்துள்ளனர். கொலை நடந்த 2 நாளைக்கு முன்புதான் ஆகாஷ் குடியிருக்கும் பகுதிக்கு வந்திருக்கிறார்கள். இவர்களுக்குள் கொடுக்கல் – வாங்கல் பிரச்சனை இருந்ததாக தெரிகிறது.

ஆனால், கொலை செய்யப்பட்ட வந்தனாவின் கழுத்தில் நகக்கீறல்கள் இருந்தன. அவரது சுடிதாரும் கிழிந்த நிலையில் கிடந்தது.. அதனால் அவரை பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது.. எனினும் போஸ்ட் மார்ட்டம் ரிப் போர்ட் வந்தால்தான் அதை பற்றி உறுதியாக தெரியும்.

ALSO READ:  விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

இந்நிலையில், அந்த வடமாநில இளைஞர்கள் தப்பிவிடாதபடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.. அவர்களது செல்போன் சிக்னலை வைத்து பார்த்ததில், கொலையாளிகள் பாலக்காடு ரெயில்வே ஸ்டேஷன் பகுதியில் சுற்றி வருவது தெரிந்தது.

அதனால் ராத்திரியோடு ராத்திரியாக சேலம் போலீசார் அங்கு சென்று 3 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஒருவர் மட்டும் தப்பி உள்ளார். அவரையும் தேடி வருகிறார்கள்.

பிடிபட்ட 3 பேரும் போலீசில் சொல்லும்போது, “நேற்று முன்தினம் நாங்க 4 பேரும் தண்ணி அடித்தோம்.. ஆகாஷின் மனைவியை பலாத்காரம் செய்ய முடிவு செய்தோம்.. அவர் வீட்டிற்குள் நுழைந்தோம். ஆனால் அவர் அதற்கு மறுத்தார். அலறி கூச்சல் போட்டார்.

சத்தம் கேட்டு யாராவது வந்துவிடுவார்கள் என்று பயந்து போன நாங்கள் அவரது கழுத்தை அறுத்தோம். அப்போது வந்தனா அலறல் கேட்டு ஆகாஷூம், சன்னியும் ஓடிவந்தனர்.. அவர்களையும் கழுத்தில் அறுத்துவிட்டு தப்பி ஓடினோம்” என்றனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories