ட்ரோன் மூலம் கண்காணிப்பு! சீல் வைக்கப்பட்ட சேலம் பகுதிகளில் போலீஸார் அதிரடி!

selam - 2026

சேலத்தில் சீல் வைக்கப்பட்ட இடங்களில் வீட்டை விட்டு யாரும் வெளியே வருகிறார்களா? என்பதை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் தில்லி நிகழ்ச்சிக்கு சென்று வந்தவர்கள் மற்றும் கொரோனா நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வசித்த இடங்களை கண்டறிந்து, அங்குள்ள தெருக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. இந்த வகையில் மாவட்ட பகுதியில் மேட்டூரில் சேலம் கேம்ப், மின்நகர், கருமலைக்கூடல் ஆகிய இடங்களிலும், தாரமங்கலத்தில் பஜார்தெரு, கோயில் பகுதி உள்ளிட்ட இடங்களில் உள்ள தெருக்களின் நுழைவுவாயில்களில் தடுப்புகள் அமைத்து சீல் வைத்துள்ளனர்.

இந்த இடங்களில் வசிக்கும் மக்கள், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான மளிகை, காய்கறிகளை வீட்டுக்கே சென்று வழங்கி வருகின்றனர். சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் யாராவது வௌியே வருகிறார்களா? என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

dron - 2026

அவ்வாறு தடையை மீறி வரும் நபர்கள் மீது வழக்கு நடவடிக்கையை போலீசார் எடுக்கின்றனர்.

இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட இடங்களை வெளியே இருந்தபடி ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி நேற்று தொடங்கியது. தாரமங்கலத்தில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், இப்பணியை மேற்கொண்டனர். அவர்கள், தாரமங்கலம் பஜார்தெரு, கைலாசநாதர் கோயில் பகுதி உள்பட சீல் வைக்கப்பட்ட அனைத்து தெருக்களின் மேல் பகுதியில் ட்ரோனை பறக்கவிட்டு, யாராவது வீட்டில் இருந்து வெளியே வந்து சுற்றுகிறார்களா? என கண்காணித்தனர்.
இதேபோல், மேட்டூரில் டிஎஸ்பி சவுந்தரராஜன் தலைமையிலான போலீசார், ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். அங்கும், சேலம் கேம்ப், மின்நகர் பகுதிகளில் ட்ரோனை பறக்கவிட்டு, 144 தடை உத்தரவை யாராவது மீறி வெளியே வருகிறார்களா? என கண்காணித்தனர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

இப்பணியை ஊரடங்கு முடியும் வரை தொடர்ந்து மேற்கொள்ள இருப்பதாகவும், ட்ரோன் கேமராவில் சிக்கும் நபர்கள் மீது வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது போக சேலம் மாவட்டத்தில் நேற்றைய தினம், 144 தடையை மீறியதாக 220 வழக்குகள் பதியப்பட்டு, 472 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 162 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories