25-03-2023 10:44 PM
More
    Homeதமிழகம்கொரோனா: வேலூரில் மேலும் 1 பெண்ணிற்கு தொற்று!

    To Read in other Indian Languages…

    கொரோனா: வேலூரில் மேலும் 1 பெண்ணிற்கு தொற்று!

    corono ward 1 - Dhinasari Tamil

    வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    வேலூர் ஆர்.என்.பாளைத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவர் பென்லேன்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இவருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யயப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பர்னீஸ்புரம் பகுதியைச் சேர்ந்த 49 வயது பாதிரியார் ஒருவருக்கு முதன்முதலாக கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்கு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதன்தொடர்ச்சியாக, தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் அமைப்பு மாநாட்டுக்குச் சென்று வந்ததாக மாவட்டம் முழுவதும் 29 பேர் அடையாளம் காணப்பட்டு வேலூரில் உள்ள பென்லேன்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

    இதில், 5 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த வாரம் உறுதியானது. அவர்களுக்கும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதன்தொடர்ச்சியாக, வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயது நபர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தொடர்ந்து, தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்ததாக ஏற்கெனவே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதியானது. இவர்களும் ஏற்கெனவே வேலூர் பென்லேன்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில், வேலூர் நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஆர்.என்.பாளையத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    இவர்கள் வீடுகள் உள்ள பகுதி ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியையொட்டி 5 கி.மீ சுற்றளவுக்கு வீடுகளில் உள்ளவர்களின் உடல்நிலையை சுகாதாரக் குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    five × four =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...