கொரோனா: வேலூரில் மேலும் 1 பெண்ணிற்கு தொற்று!

corono ward 1 - 2026

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர் ஆர்.என்.பாளைத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவர் பென்லேன்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இவருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யயப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பர்னீஸ்புரம் பகுதியைச் சேர்ந்த 49 வயது பாதிரியார் ஒருவருக்கு முதன்முதலாக கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்கு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்தொடர்ச்சியாக, தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் அமைப்பு மாநாட்டுக்குச் சென்று வந்ததாக மாவட்டம் முழுவதும் 29 பேர் அடையாளம் காணப்பட்டு வேலூரில் உள்ள பென்லேன்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

இதில், 5 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த வாரம் உறுதியானது. அவர்களுக்கும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்தொடர்ச்சியாக, வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயது நபர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தொடர்ந்து, தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்ததாக ஏற்கெனவே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதியானது. இவர்களும் ஏற்கெனவே வேலூர் பென்லேன்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், வேலூர் நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஆர்.என்.பாளையத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

இவர்கள் வீடுகள் உள்ள பகுதி ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியையொட்டி 5 கி.மீ சுற்றளவுக்கு வீடுகளில் உள்ளவர்களின் உடல்நிலையை சுகாதாரக் குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

ALSO READ:  அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories