கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.
தமிழகத்தில் 2 ஆயிரத்தை விட அதிகமான பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியது அதில் , மே 3 க்கு பின்பு பணிக்கு வரும் அனைத்து பணியாளர்களும் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தது.
இந்நிலையில் , தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அரசு பஸ்கள் இயக்கப்படாது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் , பச்சை மண்டல பகுதிகளில் நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அரசு பஸ்களை இயக்குவதில் , தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீடிக்கும். 100 கி.மீ சுற்றளவுக்குள் வசிக்கும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வகையில் அரசு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம் எனக் கூறியுள்ளனர்.