January 19, 2025, 10:16 AM
25.7 C
Chennai

மது அருந்த முன்னாடியே தலை சுத்திப் போச்சு இந்த மதுப்பிரியருக்கு.. இந்த தண்ணீல தவளைய பார்த்திருக்கீங்களா?

சீர்காழியில் டாஸ்மாக்கில் வாங்கிய மது பாட்டிலில் மிதந்த தவளையால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவலை வெளியே தெரியாமல் மறைக்க புது மதுபாட்டில் வழங்கிய ஊழியர்கள் மது பாட்டில்களை பரிசோதித்து வழங்க மேலாளர் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த 45 நாட்களுக்கு மேலாக பூட்டபட்டிருந்த மது கடைகள் புதன்கிழமை முன்தினம் காலை திறக்கபட்டது. குடிக்கும் குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

இந்நிலையில், நாகை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் தென்பாதியை சேர்ந்த ஒருவர் ரம் வகை மது பாட்டில் ஒன்று வாங்கியுள்ளார்.

வயல் பகுதிக்கு சென்று அந்த பாட்டிலை திறந்து பாதி மதுவை கப்பில் ஊற்றிவிட்டு மீண்டும் பாட்டிலை மூடும் போது உள்ளே ஏதோ கிடப்பதை பார்த்துள்ளார். அப்போது அந்த மது பாட்டிலில் தவளை ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

குடிக்க ஊற்றிய மதுவை கீழே ஊற்றிவிட்டு மது பாட்டிலை பார்த்து புலம்பியுள்ளார். அருகில் இருந்த ஒருவர் மூலம் மதுபான கடைக்கு தவளை குறித்து தகவல் தெரிந்துள்ளது. இதனையடுத்து தகவல் வெளியே தெரியாமல் மறைக்க தவளையுடன் இருந்த மது பாட்டிலை பெற்றுக்கொண்டு உடனே புது மதுபாட்டிலை கடை ஊழியர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.

ALSO READ:  இட ஒதுக்கீடு பயனைப் பெற மதமாற்றத்தை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி!

மதுபாட்டிலில் தவளை கிடந்தது குறித்து நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் கேட்ட போது இதுவரை தங்கள் கவனத்திற்கு தகவல் வரவில்லை என்றும் ஒயின் மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யும் போது காலாவதி தேதி ஆகியவற்றை பரிசோதித்தே விற்பனை செய்ய உத்தரவிடபட்டுள்ளது.

ரம் போன்ற மது வகைகளில் நிறுவனங்களில் இருந்து வரும் போது ஏதேனும் தவறு நடைபெற்றிருக்கலாம் எனவே இனிவரும் காலங்களில் மதுபாட்டில்களையும் நன்று பரிசோதித்த பின்னரே வழங்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.