December 6, 2025, 3:10 AM
24.9 C
Chennai

எலி மருந்தை தோசையில் வைத்து கள்ளக் காதலனுக்கு கொடுத்த பெண்! போலீஸால் கைது!

Screenshot 2020 0516 142511 - 2025

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தோசையில் விஷம் கலந்து கள்ளக்காதலனை கொல்ல முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை அருகே மச்சுவாடி ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் கலைவாணி (29). இவரது கணவர் பிரிந்து சென்று விட்டார். கலைவாணிக்கு ஆலங்குடி அருகே முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான ராஜதுரையுடன் (29) பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழும் நிலை வரை சென்றது.

கடந்த சில மாதங்களாக கலைவாணியுடன் ராஜதுரை குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் ராஜதுரை குடித்துவிட்டு வந்து கலைவாணியை அடிக்கடி கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் கலைவாணி மிகுந்த மனவேதனை அடைந்தார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி மது குடித்து விட்டு வந்த ராஜதுரை கலைவாணியை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் அவர் ஆத்திரமடைந்தார். இதையடுத்து அவரை கொலை செய்ய கலைவாணி திட்டமிட்டார். அன்றைய தினம் இரவு ராஜ துரைக்கு கலைவாணி தோசை சுட்டுக்கொடுத்துள்ளார்.

அப்போது தோசை மாவில் எலி பேஸ்ட்டை (விஷம்) கலந்துள்ளார். அதில் ஊற்றிக்கொடுத்த தோசையை ராஜதுரை சாப்பிட்டார். இதில் அவருக்கு தொடர்ந்து வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. கடந்த 2 நாட்களாக அவர் வாந்தி எடுத்தப்படி வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் அவரை காண நண்பர்கள் வந்த போது ராஜதுரையை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கலைவாணியிடம் விசாரித்த போது தான் ராஜதுரையை கொல்ல முயன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கலைவாணியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தோசையில் விஷம் கலந்து கொடுத்து கள்ளக்காதலனை பெண் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories