பிரசவத்தில் 20 வயது பெண் உயிரிழப்பு! மரணத்தில் மர்மம என மருத்துவமனை மீது புகார் செய்த உறவினர்கள்!

Published:

karpini - 2026

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காந்தல் என்னும் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (25). இவர் எலெக்ட்ரீசியன் வேலை செய்துவருகிறார். மோஹன்ராஜுக்கும் மாயா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

கல்யாணம் ஆகி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாயாவுக்கு, நேற்று முன்தினம் காலையில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனால் உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் நள்ளிரவில் மாயா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மாயா சாவில் மர்மம் இருப்பதாக அந்த மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்த அங்கு இருந்த அவரது உறவினர்கள், ” மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு 7 மணி வரை குழந்தையையும், தாயையும் எங்களிடம் காண்பிக்கவில்லை. எனவே மாயாவின் சாவில் மர்மம் இருக்கிறது. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும்,” என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

போலீசாரின் பேச்சை அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து மாயாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த வழக்கை சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Related articles

Recent articles

spot_img