December 6, 2025, 7:42 AM
23.8 C
Chennai

சாத்தான்குளம் விவகாரம்; சிசிடிவி, பதிவேடுகளை பத்திரப் படுத்தி வைக்க உத்தரவு!

madurai high court
madurai high court

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த கோவில்பட்டி சிறை பதிவேடுகளை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது.

கோவில்பட்டி சிறையில் தந்தை மகன் உயிரிழந்தது தொடர்பான பதிவேடுகள், மருத்துவப் பதிவேடுகளைப் புகைப்படம் எடுத்து வைக்கவும், அங்கிருக்கும் சிசிடிவி பதிவுகளைச் சேகரித்துப் பாதுகாப்பாக வைக்கவும் நீதித்துறை நடுவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்று மற்றொரு தொற்றுநோய் போல என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த விவகாரத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்த நிலை அறிக்கையை மின்னஞ்சல் வழியாகத் தாக்கல் செய்த தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் காணொலியில் விளக்கம் அளித்தார்.

sathankulam son and father
sathankulam son and father

உடற்கூறு ஆய்வு முடிந்து அறிக்கை தயாராக உள்ள நிலையில் ஊரடங்கால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இயலவில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், கோவில்பட்டி நீதித்துறை நடுவர், கிளைச் சிறைக்குச் சென்று அங்கிருக்கும் நிர்வாகப் பதிவேடுகள், மருத்துவப் பதிவேடுகளைப் புகைப்படம் எடுக்கவும், வழக்கு தொடர்பான அனைத்து சிசிடிவி பதிவுகளையும் சேகரித்துப் பாதுகாப்பாக வைக்கவும் உத்தரவிட்டனர்.

இதேபோல ராஜா சிங் என்கிற கைதியும் தாக்கப்பட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக விசாரித்துத் தனியே நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யத் தூத்துக்குடி மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.

காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்று மற்றொரு தொற்றுநோய் போல என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். காவல் துறையினருக்குத் தொண்டு நிறுவனங்கள் மூலம் மனநல ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வதந்திகளையும், வன்முறையைத் தூண்டும் வகையில் செய்திகள் பரப்புவதையும் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன், இந்த வழக்கில் உரிய நீதி வழங்கப் படும் எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை ஜூன் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories