இறந்தவருக்கு கொரோனா! இறுதி சடங்கில் பங்கேற்ற 100 பேரும் அதிர்ச்சி!

dead body
கோப்பு படம்

தமிழகத்தில் உடல்நிலை சரியில்லாமல் நகை தொழிலாளி ஒருவர் இறந்து போக, அவர் கொரோனாவால் உயிரிழந்ததாக சுகாதாரத் துறையினர் கூறியதால் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 100 பேர் அதிர்ச்சியடைந்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 67), நகை செய்யும் தொழிலாளி.

சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் போகவே வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், நெகடிவ் என வந்துள்ளது,

இந்நிலையில் உடல்நிலை சரியாகாததால் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் முடிவெடுத்தனர். இதன்படி சென்னை சென்று கொண்டிருக்கும் போதே ஆற்காடு பகுதியில் ராமமூர்த்தியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனைதொடர்ந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட ராமமூர்த்தியின் உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் என 100 பேர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தொற்று உள்ள 99 நபர்களின் பட்டியல் வெளியிட்டது, அதில் இறந்த ராமமூர்த்தியின் பெயர் இடம் பெற்றிருந்தது.

இதையடுத்து குடியாத்தம் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினர் உடனடியாக ராமமூர்த்தியின் வீட்டிற்குச் சென்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்து தெரிவித்தனர்.

அப்போது ராமமூர்த்தியின் குடும்பத்தினர் தங்களுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று இல்லை என்று சான்று அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.அதற்கு அதிகாரிகள் பட்டியலில் பெயர் உள்ளதால் கொரோனா தொற்று இருப்பது உறுதி என்றனர், இதனால் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories