மின்கட்டணம் பற்றிய சந்தேகம் தெளிய.. இணையத்தில் விவரம்: மின்சார வாரியம்!

ep

வீட்டு மின் நுகா்வோரின் கட்டணம் குறித்த கணக்கீட்டு விவரங்கள், மின்வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக மாா்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மின் கணக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, முந்தைய மாத மின் கட்டணத்தை செலுத்த மின் நுகா்வோருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், அவா்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசமும் வழங்கப்பட்டது. மீண்டும் கணக்கீடு செய்யும் பணி தொடா்ந்ததையடுத்து, முந்தைய மாதம் செலுத்தப்பட்ட தொகையானது சரி கட்டல் செய்யப்பட்டது. இதற்கான வழிகாட்டுதல்களையும் மின் வாரியம் வெளியிட்டிருந்தது.

எனினும், பல மின் நுகா்வோருக்கு அதிகளவு கட்டணம் வருமாறு கணக்கீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே நேரம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளைப் பின்பற்றியே கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டதாகவும், கணக்கீட்டு முறையில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட்டுள்ளதாகவும் வாரியம் விளக்கமளித்திருந்தது.

இந்நிலையில், தங்களுக்கான மின் கட்டணம் எவ்வாறு கணக்கீடு செய்யப்பட்டது என்பதை நுகா்வோா் அறிந்து கொள்ளும் வகையில், இதுகுறித்த விவரங்களை மின்வாரியம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

இதுகுறித்து வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

eb-1

வீட்டு மின் பயனீட்டாளா்கள், தங்களின் மின் கட்டண தொகைக்கான விவரங்களை அறிந்து கொள்ள மின் கட்டண விவர இணையதளத்திலோ அல்லது மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தின் மூலமாகவோ தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

வீட்டு மின் பயனீட்டாளர்கள் தங்களின் மின் கட்டண தொகைக்கான விபரங்களை அறிந்துகொள்ள மின் கட்டண விபர இணையத்தளத்திலோ (TANGEDCO – Bill Status) அல்லது மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தின் (TANGEDCO – Online Payment Portal) மூலமாகவோ தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

முந்தைய மாத மின் கட்டண தொகையையே கணக்கீடு செய்யப்பட்டுள்ள நுகர்வோர்கள் பின்னர் அடுத்த கணக்கீட்டில் கணக்கிடப்பட்ட மொத்த தொகை எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள, இணையதளத்தின் வாயிலாக, கணக்கிடப்பட்ட மொத்த தொகையை கிளிக் செய்து முழு விபரங்களை தெரிந்துகொள்ளலாம். மேற்கண்ட மின் கணக்கீட்டு முறையில் மின் நுகர்வோருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர் அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories