15 வயதிலிருந்து 8 வருட காதல்.. இருமுறை கர்ப்பம்.. திருமணத்திற்கு மறுத்த காதலன்! விஷம் அருந்தி கைப்பிடித்த காதலி!

love - 2026

சென்னையில் உள்ள கே.கே. டி நகர் பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது 22). இவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறி கொடுங்கையூர் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துமனைக்கு நேரடியாக விரைந்த கொடுங்கையூர் காவல் துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் இந்த பெண்மணி ஒரு நபரை காதலித்து வந்து ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. தேவி அந்த பகுதியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் விகாஷ் என்பவரின் காதலில் வலையில் சிக்கியது தெரியவந்துள்ளது.

தேவி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிக்குச் சென்று விட்ட நிலையில், கடந்த 8 வருடமாக இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

விகாஷ் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், இருவரும் சந்தோஷமாக ஊர் சுற்றி வந்துள்ளனர். இந்த சமயத்தில், அவ்வப்போது திருமண ஆசைகாட்டி தேவி இருமுறை கர்ப்பமானதும், அதனை கலைக்க சொன்னதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், விகாஷை அவரது மாமா பெண்ணிற்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க திட்டமிட்ட நிலையில், தேவியை கழற்றிவிட விகாஷ் முடிவு செய்துள்ளார்.

இதற்காக தனது வீட்டில் வரதட்சணையாக ரூ.இரண்டு லட்சம் பணம் கொடுத்தால் தான் திருமணம் செய்து வைப்பார்கள் என்று கூறி, தேவியுடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். பணத்திற்க்காக தனது காதலை தூக்கி எறிந்த விரக்தியில், தூக்க மாத்திரை சாப்பிட்ட தேவி அங்குள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனையடுத்து இந்த தகவலை அறிந்த கொடுங்கையூர் காவல் துறையினர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, குடும்பத்தினர் மறுப்பு காரணமாக ரூ.2 லட்சம் கேட்டு அவரை விட்டு விலகி சென்றதாகவும் விகாஷ் தெரிவித்துள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், மற்றொரு நாளில் குடும்பத்தினர் சம்மதத்துடன் தேவியை திருமணம் செய்வதாகவும் விகாஷ் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட காவல் ஆய்வாளர் ஆபிரகாம் குருஸ் தனது சொந்த செலவில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, பூ மாலை மற்றும் மஞ்சள் தாலி ஆகியவற்றை வாங்கி வரச்சொல்லி, காவல் நிலையத்திலேயே திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதன் பின்னர் தம்பதியின் கையில் தலா ரூ.500 கொடுத்து, வாழ்க்கையை நல்லபடியாக தொடங்கி, நல்லபடியாக இருக்குமாறும் வாழ்த்தி ஆசிர்வதித்து அனுப்பி வைத்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories