தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: அலுவலக உதவியாளர் .
காலியிடங்கள்: 05
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31. 7. 2021.
சம்பளம்: 15 ,600 முதல் 50,000.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்கவேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர்18 முதல் 35 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, முஸ்லீம் பிரிவினர் 32 வயதிற்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினரும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், ஒருங்கிணைந்த கால்நடைப் பராமரிப்பு,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக வளாகம், நந்தனம், சென்னை – 35
மேலும் விவரங்கள் அறிய https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/APPLICATION_FOR_THE_POST_OF_OFFICE_ASSISTANT1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.