பாலம் இடிந்த சம்பவம்-  தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் ..

Published:

மதுரை அருகே பாலம் இடிந்த சம்பவத்தில்  தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ரூ.3 கோடி அபராதம் விதித்துள்ளது .

மதுரை புதுநத்தம் ரோட்டில் கடந்த 2019 ம் ஆண்டு முதல், 7.5 கி.மீ., தூரத்திற்கு பறக்கும் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு(2021) ஆக.,28 ல் நவீன டிராலிகள் மூலம் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்தது. நாராயணபுரம் பகுதியில் ஒரு பகுதி சரிந்தது. அதில் உ.பி.,யை சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார். சிலர் கயமடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி, அதனடிப்படையில், தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதித்த நெடுஞ்சாலைத்துறை ஆணையம், இந்த நிறுவனத்திற்கு கட்டுமானம் தொடர்பாக ஆலோசனை வழங்கிய நிறுவனத்திற்கும் ரூ.40 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தொகையை விரைவில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tamil News large 3016343 - 2026
ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img