எடப்பாடி கோயில் திருவிழாவில் தெப்பம் தண்ணீரில் மூழ்கியதால் பரபரப்பு..

Published:

எடப்பாடியில் ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகளை தெப்பத்தில் எடுத்துச் செல்லும்போது எதிர்பாராத விதமாக தெப்பம் தண்ணீரில் மூழ்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சேலம் மாவட்டம், எடப்பாடி, மேட்டு தெருவில் உள்ள ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகளை மூன்றாவது வாரச் சனிக்கிழமை நாள்களில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து பெரிய ஏரியை கடந்து சென்று சூரிய மலை அடிவாரத்தில் உள்ள வெள்ளூற்று பெருமாள் கோயிலில் வைத்து சுமார் 2000-த்திற்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு பெய்த தொடர் கன மழை காரணமாக ஏரி, நீர் நிலைகள் நிரம்பியதால் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, சுவாமிகளை தெப்பத்தில் எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தொடர்ந்து மேட்டு தெருவிலிருந்து சுவாமிகளை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று பெரிய ஏரி முதல் கரையில் தெப்பத்தில் சுவாமியை வைக்கும் போது ஆட்கள் அதிக அளவில் தெப்பத்தில் இருந்ததாலும் பாதுகாப்பு அம்சங்கள் எதுவுமின்றி தெப்பம் உருவாக்கப்பட்டதாலும் எதிர்பாராத விதமாக தெப்பம் தண்ணீரில் மூழ்கியது. அப்போது தெப்பத்தில் இருந்த சிலர் தண்ணீரில் மூழ்கினர். உடனடியாக காவல்துறையினர் அங்கு இருந்தவர்களை மேலே வரவழைத்த பின்னர் தெப்பம் மீண்டும் தயார்படுத்தப்பட்டு குறைவான ஆட்களை மட்டும் அனுமதித்து சுவாமியை தெப்பத்தில் வைத்து வெள்ளூற்று பெருமாள் கோயிலுக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தெப்பத்தில் சுவாமியை எடுத்துச் சென்றனர்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

மேலும் தெப்பத் திருவிழாவில் 1000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர். மேலும் பாதுகாப்பு அம்சங்கள் எதுவுமின்றி பரிசல் மூலம் தெப்பம் தயாரிக்கப்பட்டதாலும் பாதுகாப்பு உடைகள் இன்றி தெப்பத்தில் காவல்துறையினர் அதிக அளவில் ஆள்களை அனுமதித்ததாலும் இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.

fest - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img