January 20, 2025, 6:22 PM
26.2 C
Chennai

18 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் எப்போது? முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் 15 அரசு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் 18,775 கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டமாக தேர்தல் நடைபெறும் என கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது:

கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் கடந்த 2013-ம் ஆண்டு நடந்தது. தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களின் 5 ஆண்டு பதவிக்காலம் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது. புதிதாக நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக, நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்களை கூட்டுறவுத் தேர்தல் ஆணையம் நடத்தவுள்ளது.

கூட்டுறவுத்துறை, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை, மீன் வளத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, கூட்டுறவு வீட்டுவசதித் துறை, பனைப்பொருள் வளர்ச்சி வாரியம், கதர் கிராம தொழில் வாரியம், தொழில் மற்றும் தொழில் வணிகத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை, வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி பஞ்சாயத்துராஜ் துறை, பட்டு வளர்ச்சித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, சர்க்கரைத்துறை ஆகிய 15 அரசு துறைகளின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் 18,775 சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்களை கூட்டுறவு தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.

ALSO READ:  ஆதீன சொத்துகளை அபகரிக்க சதி; மடத்தின் பாரம்பரியத்தை இழிவுபடுத்த அறநிலையத்துறை எண்ணம்?

தொடக்க சங்கங்கள், மத்திய சங்கங்கள், மாநில சங்கங்கள் என்ற மூன்றடுக்கு முறையில் கூட்டுறவுச் சங்கங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவதால் அவற்றிற்கான தேர்தல்களை ஐந்து கட்டங்களாக நடத்த கூட்டுறவு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையில் உள்ள 18,435 தொடக்க கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்களை முதற்கட்டத்தில் நான்கு நிலைகளில் நடத்தப்பட உள்ளது. அதற்கான தேர்தல் திட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் தொடர்புடைய சங்கங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட தேர்தல் அலுவலர்களால் முதல் நிலைக்கான தேர்தல் அறிவிப்பு மார்ச் 12ந்தேதி வெளியிடப்படும்.

அரசு துறைகளின் தலைவர்கள் மாநில தேர்தல் அலுவலர்களாகவும், அத்துறைகளின் மாவட்ட அளவிலான அதிகாரிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர், சென்னை மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்கள் மாவட்ட தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டுறவுச் சங்க தேர்தல்களை நியாயமாகவும், சுதந்திரமாகவும், சட்டபூர்வமாகவும் நடத்திட மாவட்ட நிர்வாகம் தேவையான ஒத்துழைப்பை தந்திட மாவட்ட ஆட்சித் தலைவர்களையும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களையும் கூட்டுறவுத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ALSO READ:  ‘இஸ்ரோ’வின் புதிய தலைவராக, தமிழகத்தின் வி.நாராயணன்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...