December 5, 2025, 2:24 PM
26.9 C
Chennai

ரசிகரின் செல்பி மோகம்… நடிகர் சிவகுமார் கோபம்! இன்றைய சமூகதள கொத்துக்கறி மேட்டரே அதான்..!

sivakumar selfie - 2025

செல்ஃபி எடுக்க வந்தவரின் மொபைலைத் தட்டிவிட்ட சிவக்குமார்! இதுதான் இன்றைய ஹாட் டாபிக்! சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்ட விஷயமும் கூட!

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வைப் பற்றி அறிந்த ரசிகர்கள் நடிகர் சிவக்குமாரைக் காண, பெரும் கூட்டமாக திரண்டிருந்தனர். திறப்பு விழாவுக்காக உள்ளே சிரித்த முகமாக வந்தார் சிவக்குமார்.

அங்கு ஒரு ரசிகர் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதைக் கண்டதும், திடீரென அவரது மொபைலை தட்டிவிட்டார். இந்த வீடியோ இன்று காலையில் இருந்தே இணையம் எங்கும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் குறித்து பலரும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்த ஒரு வித்தியாசமான பதிவு….

செல்பி எடுக்க வந்தவரோட செல்போனை தட்டி விட்டு, சமூக வலைத்தளங்களில் இன்றைய கொத்துக்கறி ஸ்பெஷலிஸ்ட் ஆகிப் போயிருக்கிறார் நடிகர் சிவகுமார்.

கடந்த பத்து ஆண்டுகளாகவே அவர் அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டு ரொம்பவே தடுமாற்றத்துடன் காணப்படுகிறார்.. என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோம் என்பதே அவருக்கு புரியாமல் போய்க்கொண்டிருக்கிறது.

2014 ஜுன் மாதம் ஒரு பேட்டி… 192 படங்கள் நடித்த 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையும் என் 7 ஆண்டு கால ஓவியன் வாழ்க்கையின் கால் தூசுக்குக் கூட ஈடாகாது என்று சொல்லியிருந்தார் நடிகர் சிவக்குமார். இதைத்தான் பிதற்றல்தனமான பேச்சு என்று அன்றே சொன்னோம்…

ஓவியக்கலை அற்புதமானதுதான்.. அதற்காக பெரும் புகழையும் செல்வத்தையும் தேடித் தந்த சினிமாவை கேவலமாக பேசுவதா?

ஓவியக்கலையை நம்பி சோத்துக்கு லாட்டரி அடிக்கிறதே நிரந்தரமா ஆயிந்திருந்தா, இப்படி பேசியிருப்பீங்களா சிவக்குமார்? என்றெல்லாம் கேட்டோம்..

இயல்பை விட்டு எதுவாகவோ மாறப்போனால், காமடியாகிப் போய் தூக்கி கடாசப்படுவோம் என்பதை யாராவது அவரிடம் சொல்வது நல்லது.. கடைசியா ஒரு சந்தேகம்..

யோகா பண்றவங்களுக்கு இவ்ளோ கோபம் வருமா? ஏன்னா, அடிக்கடி ஆட்டுக்கால் பாயா சாப்பிடற நமக்கே டக்குன்னு கோபம் வரமாட்டேங்குதுன்ற டவுட்லதான் கேக்கறோம்..

1 COMMENT

  1. இவர் நடிக்கும்போது அந்த செல்பி வீடியோ எடுத்த பையன் சினிமா பார்க்கும் வயதுக்கு வந்திருக்க மாட்டான் அவனை தனது ரசிகர் என்று அவர் கூறியது காமெடி – 2

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories