தமிழகம், தமிழகச் செய்திகள்,
திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
தமிழகத்தில் வாக்குப் பதிவு சதவீத குளறுபடிகள்! தேர்தல் ஆணையர் ‘புதிய’ விளக்கம்!
― Advertisement ―
குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!
More News
மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
Explore more from this Section...
தமிழ் நாட்டை “அம்மா நாடு” ஆக்கிவிடுவார்கள்: கருணாநிதி
சென்னை :
"தமிழகத்தின் தலைவிதி மாற்றப்படாவிட்டால் தமிழ் நாட்டின் பெயரையே மாற்றி 'அம்மா நாடு' என்று பெயர் வைத்தாலும் வைத்து விடுவார்கள் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருணாநிதி தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுத் தேர்தல் வர இன்னும் சில மாதங்கள்தான் உள்ளன. அடுத்த ஆண்டு (2016ல் திமுக சார்பில்) முப்பெரும் விழா நடைபெறும்போது, தமிழ் நாட்டின் தலை விதி மாற்றப்பட்டிருக்கும் (திமுக ஆட்சிக்கு வந்திருக்கும்/ வந்திருக்க வேண்டும்). மாற்றப்பட்டாக வேண்டும். அந்தத் தலைவிதி மாற்றப்படாவிட்டால் (திமுக ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டால்), தமிழ்நாட்டின் தலைவிதியே மாற்றப்பட்டு விடும். ஏன், தமிழ் நாட்டின் பெயரையே மாற்றி "அம்மா நாடு" என்று பெயர் வைத்தாலும் வைத்து விடுவார்கள்.
கூவம் நதியை சீரமைக்க ரூ.605 கோடி ஒதுக்கியது தமிழக அரசு
சென்னை:
கூவம் நதி சீரமைப்புத் திட்டத்துக்கு ரூ.605 கோடியை ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நீர் நிலைகளை சீரமைத்திட அனைத்து சார் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும் பணியை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் மேற்கொண்டுவருகிறது. கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்து மீட்டெடுப்பதற்கான ஒரு பெரும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை, ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ ஒருங்கிணைப்பு அமைப்பாக இருந்து செயல்படுத்தும் என்று 2014- 2015 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம்: அக்டோபரில் பணி தொடங்கும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
சென்னை:
நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.