ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!

madurai govt land sale - 2026
#image_title

டி எஸ் வெங்கடேசன்

இம்மாதம் மதுரையில் ரூ933  கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம் ஆவார்.  இப்போது இவர் மற்றொரு புகாரை அளித்துள்ளார். அதில் சுமார் 1,200 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அமலாக்கத் துறை, சிபிஐ, தமிழக டிஜிபி, மதுரை காவல் ஆணையர் ஆகியோருக்கு மனு அளித்துள்ளார்.

காண்க : https://www.facebook.com/groups/2833924983556597/permalink/3797757177173368/?mibextid=Nif5oz

இம்மாதம் 29ம் தேதியிட்ட இந்த மனுவின் பிரதி கட்டுரையாளரின் பார்வை வசம் உள்ளது. அதில் தே தேவசகாயம் ´மதுைர தாலுக, மதுரை மாவட்ட, தல்லாகுளம் கிராமத்தில் சர்ச்க்கு சொந்தமான, 31 ஏக்கர் 10 சென்ட் அதிக மதிப்புள்ள நிலத்தை ரூ 1200 கோடி ரூபாய்க்கு  கிரிமினல் சதி, ஏமாற்று,மோசடி செய்தல் மற்றும் முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக சிஎஸ்ஐ ( தென்னிந்திய சர்ச் மதுரை ராமநாதபுரம் மறைமாவட்டத்தின் பதிவாளராகப் பதவி வகித்த வழக்கறிஞர் சி பெர்ணான்டஸ்,  தற்ேபாது தென்னிந்திய திருச்சைபயின்) பொது செயலாளர் , தி.ஜான்சன் . மதுரை- ராம்நாடு மறை மாவட்டத்தின் சொத்து அதிகாரியாக பதவி வகித்து வந்த, தற்போது மதுரை-ராமநாதபுரம் மறைமாவட்டச் செயலாளர் மற்றும் வேறு சிலர் மீது புகார் அளித்துள்ளார்.

தென்னிந்திய திருச்சபை மற்றும் மதுரை ராமநாதபுரம் மறை மாவட்ட உறுப்பினராக உள்ளதாகவும், கிறிஸ்துவ சீர்திருத்த மக்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ள தே. தேவசகாயம் கிறிஸ்துவ திருசபை அமைப்புகளின் முறைகேடுகளை, சொத்துக்களை மடைமாற்றி விற்பது, கையாடல் உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராடி வழக்காடி வருகிறார்.

மனுவில் “ மதிப்பு மிக்க நிலமான சர்வே எண் 163/சி(9.75 ஏக்கர்) 163/பி (160 ஏக்கர்) 163/ஜி (13.75) ஏக்கர்  மற்ரும் 334 (6 ஏக்கர் ஆகியவற்றில் உள்ள அனைத்து ஏசி 31.10 சென்ட் நிலம் மதுரை வட்டம், மாவட்டம் தல்லாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள சர்வே எம் 6/2,3,4,5, மற்றும் 6 ஆகியவை முதலில் மாநில அரசால் கிறிஸ்துவ என்ஜிஒக்கு வெளிநாடுகளின் அமைப்புகளுக்கான அமெரிக்க கழகம் என அழைக்கப்பட்ட தற்போது உலக அமைச்சக அமைப்பான ஐக்கிய திருச்சபை கழகத்துக்கு ( American Board of Commissioners for Foreign Mission (ABCFM) now United Church Board for World Ministries (UCBWM) ஒதுக்கப்பட்டதாக கூறுகிறார். 

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

ஏழை பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தொழிலகங்களை நிறுவவும், தையல் , ஜரிகை வேலை, கைப்பின்னல் (எம்பிராய்ரி) தோட்டக்கலை, கோழி வளர்ப்பு மற்றும் பால் பண்ணைத் தொழில் ஆகியவற்றில் பயிற்சி அளித்து அதிகாரம் மளிக்கும் வகையில் அமெரிக்க மிஷினின் அப்போதைய அலுவலக பொறுப்பாளரின் வேண்டுகோளை ஏற்று அரசு வழங்கியது.  அத்துடன் புத்தகம் கட்டுதல், நெசவுத் தொழில் மற்றும் சுயதொழில் தொடங்க உதவும் நோக்கத்துடன் நிலம் நிபந்தனைகளுடன் கொடுக்கப்பட்டதாக தேவசகாயம் தெரிவிக்கிறார்.

இதற்காக 1912ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி 31.10ஏக்கர் நிலத்தை அமெரிக்க மிஷனுக்கு அரசு ஒதுக்கியது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சர்ச் ஆப் செளத் இந்தியா மதுரை –ராமநாதபுரம் மறைமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.  இதன் கட்டுப்பாட்டின் கீழ் 24 மறைமாவட்டங்களில் மதுரை –ராமநாதபுரமும் ஒன்று.

“குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கறிஞர் பெர்ணர்ன்டஸ், பதிவாளராக பதவி வகித்த ரத்தின ராஜா, தற்போதைய தென்னிந்திய திருச்சபையின் பொது செயலாளராகவும் உள்ள ஜான்சன்,  மதுரை-ராமநாதபுரம் மறை மாவட்டத்தின் சொத்து அதிகாரி பதவி வகித்து, தற்போதை அதன் செயலாளராக இருக்கும் இஸ்ரேல் இணைந்து  சில நபர்களுடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டு சட்ட விரோதமாக என்ஜிஓக்கு வழங்கப்பட்ட நிலத்தை நிபந்தனைகளுக்கு புறம்பாக விற்பனை செய்து பணம் ஈட்டியுள்ளதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.  மேலே கூறப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியில் வணிக வளாகத்தை கட்டி அதை வாடகைவிட்டு வணிகர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான கோடிகளை பகடியாக ( சட்ட விரோத வைப்புத் தொகையாக) பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்.

ALSO READ:  மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

“இந்த 31.10 ஏக்கர் நிலத்தை பொறுத்த வரையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மூன்றாம் நபர்களுக்கு  ( தல்லாக்குளம் எஸ் ஹூசைன் காதர் -4-2-2008ச தல்லாகக்குளம் ஷ்ரேயஸ் அறக்கட்டளை -16-2-2008, ஐஐஎஃப்எல் ரியால்டி -15-2-2008)ஆதரவாக விற்பனை பத்திரங்களை உருவாக்கியுள்ளனர். இந்த சட்ட விரோத பரிவர்த்தனைக்களுக்கு மேற்குறிப்பட்டவர்கள் காரணம் என்றும், அவர்கள் தென்னிந்திய திருச்சபை மற்றும் தென்னிந்திய திருச்சபை அறக்கட்டளை சங்கம் மற்றும் அப்போதைய மதுரை ராமநாதபுரம் மறைமாவட்ட பேராயர் மற்றும் பொருளாளர்  ஜி வி சவாரி மூலம் தவறான புகார்களை அளித்துள்ளனர் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பல கோடி ரூபாய்களை கருப்புப் பணமாக பெற்றுள்ளனர் என்றும், உண்மைகளை மறைத்து வீடு கட்டும் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாருக்குள்ளாகி உள்ளவர்கள்  344க்கும் மேற்பட்ட கடைகளை கட்டி 100 கோடி ரூபாய்க்கு மேல் அதாவது கடை ஒன்றுக்கு ரூ 30 லட்சம் வீதம் வியாபாரிகளிடமிருந்து99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற்றுள்ளனர்.  இது கிட்டதட்ட சர்ச் நிலங்களை விற்பனைச் செய்வதற்கு ஈடாகும்.  இதன் மூலம் அவர்கள் பல நூறு கோடி ரூபாய அளவுக்கு மோசடி செய்துள்ளதாகவும் தேவசகாயம் கூறுகிறார்.  இவற்றின் இன்றைய மதிப்பு தோராயமாக ரூ 1200 கோடி என்றும் கூறுகிறார்.

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்ததாகவும் டிவிஷன் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு 31.10 ஏக்கர் நிலம் , நில நிர்வாக ஆணையரால் விசாரிக்கப்பட்டு அவை மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார். புகார் கூறப்பட்டவர்கள் பல கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகளை வீடு, நிலம், தங்கம் போன்றவற்றை வாங்கி குவித்துள்ளதாகவும் இவற்றை உடனடியாக பறிமுதல் செய்து காவல்துறையினர் கையகப்படுத்த வேண்டும் என்றும் அதில் கோரிக்கை வைத்துள்ளார்.  இவர்கள் மீது 120 குற்றச் சதி, ஏமாற்றுதல், மோசடி, பண துஷ்பிரயோகம், ஆட்மாறறாட்டம், நில அபகரிப்பு, சட்ட விரோத பணபரிவர்த்தனை உள்ளிட்ட குற்றங்களுக்காக குற்ற வழக்குப் பதிந்து சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தேவசகாயம் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

பாரதத்தின் வளத்தை கேள்விப்பட்டு வர்த்தகம் புரியும் போர்வையில்  வந்த ஆங்கிலயேர்கள், அனைத்துயம் சுரண்டி, மக்களிடையே பல்வேறு பிரிவினைகளை ஏற்படுத்தி சுகம் கண்டனர். சுபாஷ் சந்திர போஷ், கோகலே, வீரர் சாவர்க்கர், வஉசி, பாரதி, வாஞ்சிநாதன், வ வே சு, நீலகண்ட பிரமசாரி போன்ற தீவிர வாத சிந்தனைக் கொண்டவர்களின் போராட்டம், சிப்பாய் கலகம், மக்களிடையே கடும் எதிர்ப்பு காரணமாக ( ஆளுநர் ரவி கூறியது போல) நாட்டை விட்ட ஓட முடிவெடுத்தனர். போகும் முன்பாக அரசு நிலங்களை கிறிஸ்துவ என்ஜிஓக்கள், தனிநபர்களுக்கு அவர்கள் வசித்து வந்த பங்களாக்கள், வீடுகள், தோட்டம் துரவுகளை, அரசு நிலங்களை தானமாகவும், குறைந்த கட்ட குத்தகைக்கும் கொடுத்தனர். சில நிபந்தனைகளை விதித்தனர். காலப் போக்கில் இவை பல கைமாறி தனியார் பட்ட நிலங்களாக மாறிவிட்டன. ஆனால் தேவசகாயம் போன்றவர்கள் ஆதாரங்களுடன் கிறிஸ்துவ என்ஜிஓக்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு நிபந்தனைகளுக்கு எதிராக விற்கப்படுகின்றன என்பதை நீதிமன்றம் மூலம் உலகுக்கு எடுத்துரைத்து வருகிறார்.

இவரைப் போன்றவர்கள் ஈடுபட்டால், மதமாற்ற வியாபாரிகளின் கைவசம் இதுபோன்று உள்ள நிலங்கள், சொத்துக்களை மீட்டு அரசுக்கு கொடுக்க முடியும் என்பது பெரும்பலானோரின் ஆதங்கமாக உள்ளது. இந்துக்களின் கோயில்கள் மீது இஸ்லாமியர்கள் மசூதிகளை கட்டி உரிமை கொண்டாடி வருவது அயோத்தியா ராம புண்ணிய பூமி மீட்புக்கு புிறகு வேகமெடுத்துள்ளது. காசி, மதுரா இடங்கள் தொடர்பாக வழக்குகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் இதுபோன்ற புகார்கள் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories