விநோதம்: நாய்க்குப் பிறந்தது யானைக் குட்டி?! தும்பிக்கையுடன் பிறந்ததால் நம்பிக்கை இழந்த நாய்!

dog with trunk1 - 2026

தும்பிக்கையுடன் பிறந்த நாய்க் குட்டியைக் கண்டு அதிசயிக்கின்றனர் கிராமத்து மக்கள். ஆந்திரப் பிரதேசத்தில், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இந்த விநோதம் நடந்துள்ளது!

‘பாலகொண்ட’ வீதியில் செங்கல் சூளை அருகில் நாய் ஒன்று அண்மையில் குட்டி போட்டது. அந்தக் குட்டிகளில் ஒரு குட்டி விசித்திரமான முகத்துடன் பிறந்துள்ளது.

dog with trunk - 2026

அந்த நாய்க்குட்டியின் முகத்தில் மூக்குக்கு பதில் தும்பிக்கை உள்ளது. அதனால் அங்குள்ளவர்கள் நாய்க்கு யானைக்குட்டி பிறந்துவிட்டது என்று பரபரப்பாகப் பேசிக் கொண்டு சென்றார்கள்.

dog with trunk4 - 2026

இதை அடுத்து நாய்க்குப் பிறந்த யானைக்குட்டியைக் காண வேண்டும் என்ற ஆவலில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மக்கள் பெருமளவில் சாரிசாரியாக வந்து செல்கிறார்கள்.

ஆனால், அந்த நாய்க்குட்டிக்கோ, படு சிரமம். நீண்ட மூக்கு இருப்பதால் பால்குடிக்கக் கூட சிரமப்படுகிறது என்றும் அதனால் தாமே பால் குடிக்கச் செய்வதாகவும் உள்ளூர் மக்கள் உருக்கமுடன் கூறுகின்றனர்.

dog with trunk3 - 2026

இதுகுறித்து விலங்கியல் மருத்துவர்கள் கூறிய போது, பிறவிக் கோளாறு காரணமாகவே நாய்க்குட்டி இது போன்ற வடிவில் பிறந்துள்ளது என்றனர். இதுபோன்று பிறக்கும் நாய்க்குட்டிகள் அதிக நாள் உயிரோடு இருக்காது என்றும் அவர்கள் வருத்ததுடன் தெரிவித்தனர் .

dog with trunk2 - 2026

இந்த நாய்க்குட்டிக்கு இன்னமும் கண்கள் கூட முழுமையாக ஏற்படவில்லை. எனவே அதனால் சரியாக பார்க்க முடியவில்லை என்கிறார்கள். இந்த நாய்க்குட்டி குறித்த படங்களும் வீடியோவும் சமூகத் தளங்களில் ஆச்சரிய கரமானதாகவும் அதிசயமானதாகவும் கூறி பகிரப் பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories