சொந்த மகள்களைக் கொன்ற பெற்றோர்

Published:

IMG-20210127-WA0000-1
IMG-20210127-WA0000-1

மூட பக்தியால் மகள்களை கொன்ற பெற்றோர்.

ஆந்திர பிரதேஷ் சித்தூரில் பெற்றோரின் மூட பக்தி மகள்கள் இருவரின் உயிரை வாங்கியது.

இரு பெண்களையும் பெற்றோரே கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்தூர் மாவட்டம் மதனபல்லி ரூரல் மண்டலம் அங்குசெட்டிபல்லெ அருகில் சிவ நகரில் இந்த சம்பவம் நடந்தது

சிவ நகரைச் சேர்ந்த புருஷோத்தம நாயுடு, அவர் மனைவி பத்மஜா தம் மகள்களான அலேக்யா (27), சாயி திவ்யா (22) இருவரையும் கொடூரமாக அடித்துக் கொன்றுள்ளனர்.

IMG-20210127-WA0001-0
IMG-20210127-WA0001-0

சென்ற வருடம் உள்ளூரில் கட்டிக்கொண்ட சொந்த வீட்டுக்கு குடியேறினார்கள். அப்போதிலிருந்து வீட்டில் கணவனும் மனைவியும் எப்போது பார்த்தாலும் பூஜைகள் நடத்துவார்கள் என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். ஞாயிறு இரவு கூட பூஜைகள் செய்தார். முதலில் சிறிய மகளை சூலத்தால் குத்தி கொன்றார்கள். அதன் பிறகு பெரிய மகளின் வாயில் செம்பை வைத்து தலையில் அடித்துக் கொன்றுள்ளார்கள். இந்த விஷயத்தை தானாகவே புருஷோத்தம நாயுடு ஒரு லெக்சரர் நண்பரிடம் கூறியதால் அவர் வீட்டுக்கு வந்து பார்த்து போலீசாருக்கு செய்தி தெரிவித்தார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

பெற்றோரை போலீசார் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.

கொரோனா அடங்கிப் போகும் என்றும் இன்றோடு கலியுகம் முடிந்து விட்டது என்றும் சத்திய யுகம் ஆரம்பமானது என்றும் அந்த பெற்றோர் கூறுகிறார்கள் என்று மதனபள்ளி டிஎஸ்பி ரவி மனோகராசாரி கூறினார். அது மட்டுமல்ல தாம் பலிகொடுத்த பெண்கள் இருவரும் மீண்டும் உயிர் பெறுவார்கள் என்று அவர்கள் நம்புவதாக தெரிவித்தார்.

  • பெற்றோர் இருவரும் மிகவும் சிறந்த கல்வியாளர்கள் என்றும் புருஷோத்தம நாயுடு மதனப்பல்லெ அரசு பெண்கள் டிகிரி கல்லூரியில் வைஸ் பிரின்ஸிபால் ஆக பணிபுரிகிறார். அவருடைய மனைவி பத்மஜா ஒரு கல்வி நிறுவனத்தில் கரஸ்பாண்டன்ட் மற்றும் பிரின்ஸ்பால் ஆக பணிபுரிகிறார். இறந்தவர்கள் கூட உயர்கல்வி படித்து வருகிறார்கள். பெரிய மகள் போபாலில் போஸ்ட் கிராஜுவேட் படிக்கிறார். சிறிய பெண் பிபிஏ முடித்து பிரபல ஏ ஆர் ரகுமான் மியூசிக் அகடமியில் சங்கீதம் படித்து வருகிறார்.
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img