விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம்.. நல்ல தொடக்கம்! அரசியல் ஆக்கவேண்டாம்!

modi poorman - 2026

இப்போது மோடி அரசு இரண்டு ஹெக்டேர் நிலம் மற்றும் அதற்கும் குறைவாக நிலம் இருந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வருடம் ரூபாய் ஆறாயிரம் மூன்று தவணைகளில் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவித்து முதல் தவணையை வங்கி கணக்கில் செலுத்தி வருகின்றனர்.

இதனை பற்றி தேர்தல் ஆதாயம் என விமர்சனம் செய்பவர்கள் உண்டு விவசாய கடன் தள்ளுபடியில் தான் எண்ணூறு பேருக்கு நானூறு கோடிகள் என கணக்கில் காட்டி பணக்கார அரசியல் விவசாயிகள் பங்கு போடுவார்கள்.

இந்த தொகை வருடம் மூன்று முறை பருவ காலத்தில் விவசாய செலவில் ஒரு பகுதியை ஈடு கட்டும்.அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதம் ஒருமுறை அகவிலைபடி கொடுப்பார்கள். அது போல வருடம் மூன்று தடவை இரண்டாயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்குவதில் தவறு இல்லை.

மாநில அரசு கூட இலவச திட்டங்களை குறைத்து தனது பங்குக்கு விவசாயிகளுக்கு கூடுதலாக சில ஆயிரம் ரூபாய் கொடுக்க தடை இல்லை.இது நல்ல தொடக்கம் .இனி பிரதிவருடமும் வருங்காலங்களில் தொடரும்.

ALSO READ:  வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

விவசாயிகள் உழைத்து சம்பாதிப்பவர்கள் தான். அவர்களுக்கு சாகுபடியில் உதவிடதான் இந்த தொகை பயன்படட்டுமே. எனவே துவக்கி வைத்தால் யாரும் நிறுத்த முடியாது. அந்த வகையில் நல்ல எண்ணம் நல்ல தொடக்கம்.

ஜாபர் ஷெரீப் ரயில்வே அமைச்சர் ஆக பணியாற்றியபோது பெங்களூர் டூ சென்னைக்கு லால்பாக் என்ற பெயரில் ஒரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் விட்டார்கள். எதற்காக அந்த ரயில் விடப்பட்டது என்றால் ஜாபர் ஷெரீப் மகள் வேலூர் பாகாயத்தில் உள்ள சிஎம்.சி. மருத்துவக் கல்லூயியில் மருத்துவப் படிப்பு வந்தார்.

அவரது மகள் தினம் காலை பெங்களூரில் கிளம்பி காட்பாடியில் காலை ஒன்பது மணிக்கு இறங்கி மாலை ஐந்து மணிக்கு மீண்டும் அதே ரெயிலில் பெங்களூர் சென்று விடுவார்.

இவ்வாறு தினமும் பெங்களூரில் இருந்து காட்பாடி வந்து திரும்ப வசதியாக அந்த ரயில் துவக்க பட்டாலும் அதன் மூலம் கூடுதலாக ஒரு ரயில் வசதி கிடைத்தது பல ஆயிரம் பயணிகள் பயன் அடைந்துள்ளனர் .

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அவரது மகள் படிப்பு முடிந்த பின்னர் சில கூடுதல் நிறுத்தங்களுடன் இன்னும் சிறப்பாக இயங்கி பயன் தருகிறது. இதற்கு காரணம் முன்னாள் மத்திய அமைச்சர் ஜாபர் ஷெரீப்தான்.

ஆகவே….  இந்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி தொடர்ந்து பயன் தரும். எனவே இதனை அரசியல் ஆக பேசவேண்டாம்.

– கார்த்திகேயன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories