விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம்.. நல்ல தொடக்கம்! அரசியல் ஆக்கவேண்டாம்!

modi poorman - 2026

இப்போது மோடி அரசு இரண்டு ஹெக்டேர் நிலம் மற்றும் அதற்கும் குறைவாக நிலம் இருந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வருடம் ரூபாய் ஆறாயிரம் மூன்று தவணைகளில் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவித்து முதல் தவணையை வங்கி கணக்கில் செலுத்தி வருகின்றனர்.

இதனை பற்றி தேர்தல் ஆதாயம் என விமர்சனம் செய்பவர்கள் உண்டு விவசாய கடன் தள்ளுபடியில் தான் எண்ணூறு பேருக்கு நானூறு கோடிகள் என கணக்கில் காட்டி பணக்கார அரசியல் விவசாயிகள் பங்கு போடுவார்கள்.

இந்த தொகை வருடம் மூன்று முறை பருவ காலத்தில் விவசாய செலவில் ஒரு பகுதியை ஈடு கட்டும்.அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதம் ஒருமுறை அகவிலைபடி கொடுப்பார்கள். அது போல வருடம் மூன்று தடவை இரண்டாயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்குவதில் தவறு இல்லை.

மாநில அரசு கூட இலவச திட்டங்களை குறைத்து தனது பங்குக்கு விவசாயிகளுக்கு கூடுதலாக சில ஆயிரம் ரூபாய் கொடுக்க தடை இல்லை.இது நல்ல தொடக்கம் .இனி பிரதிவருடமும் வருங்காலங்களில் தொடரும்.

விவசாயிகள் உழைத்து சம்பாதிப்பவர்கள் தான். அவர்களுக்கு சாகுபடியில் உதவிடதான் இந்த தொகை பயன்படட்டுமே. எனவே துவக்கி வைத்தால் யாரும் நிறுத்த முடியாது. அந்த வகையில் நல்ல எண்ணம் நல்ல தொடக்கம்.

ஜாபர் ஷெரீப் ரயில்வே அமைச்சர் ஆக பணியாற்றியபோது பெங்களூர் டூ சென்னைக்கு லால்பாக் என்ற பெயரில் ஒரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் விட்டார்கள். எதற்காக அந்த ரயில் விடப்பட்டது என்றால் ஜாபர் ஷெரீப் மகள் வேலூர் பாகாயத்தில் உள்ள சிஎம்.சி. மருத்துவக் கல்லூயியில் மருத்துவப் படிப்பு வந்தார்.

அவரது மகள் தினம் காலை பெங்களூரில் கிளம்பி காட்பாடியில் காலை ஒன்பது மணிக்கு இறங்கி மாலை ஐந்து மணிக்கு மீண்டும் அதே ரெயிலில் பெங்களூர் சென்று விடுவார்.

இவ்வாறு தினமும் பெங்களூரில் இருந்து காட்பாடி வந்து திரும்ப வசதியாக அந்த ரயில் துவக்க பட்டாலும் அதன் மூலம் கூடுதலாக ஒரு ரயில் வசதி கிடைத்தது பல ஆயிரம் பயணிகள் பயன் அடைந்துள்ளனர் .

அவரது மகள் படிப்பு முடிந்த பின்னர் சில கூடுதல் நிறுத்தங்களுடன் இன்னும் சிறப்பாக இயங்கி பயன் தருகிறது. இதற்கு காரணம் முன்னாள் மத்திய அமைச்சர் ஜாபர் ஷெரீப்தான்.

ஆகவே….  இந்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி தொடர்ந்து பயன் தரும். எனவே இதனை அரசியல் ஆக பேசவேண்டாம்.

– கார்த்திகேயன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories