ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக் ஷா பிறந்த தினம் இன்று!

sam manakesha - 2026

ஒரு முறை இந்திய ராணுவத்தின் 26ஆவது இன்ஃபேண்ட்ரி டிவிஷன் தலைமையகத்துக்கு புதிதாகப் பயிற்சி முடித்த ஒரு லெஃப்டினண்ட் வந்தார். அங்கே காலை உடற்பயிறசியை முடித்துக் கொண்டு சிவிலியன் உடையில் நடந்து வந்து கொண்டிருந்தார் டிவிஷனின் கமாண்டிங் ஆபீசரான மேஜர் ஜெனரல்.

அவரை அடையாளம் தெரியாத அந்த லெஃப்டினண்ட் “மிஸ்டர்! என் பெட்டியைத் தூக்கி வர வேண்டும். அதற்கு யாரைப் பார்க்க வேண்டும்?” என்றார். சிரித்த மேஜர் ஜெனரல் “உங்கள் பெட்டியை நீங்களே எடுத்து வரலாம்.” என்றார்.

“ஸார்! நான் ஒரு கமிஷண்ட் ஆபீஸர். ஏன் இங்கே இந்த வேலை செய்ய யாரும் இல்லையா?” என்றார்.

மேஜர் ஜெனரல் பெட்டியைத் தூக்கிக் கொண்டு நடந்தார். பின்னாலேயே மிடுக்குடன் நடந்து போனார் அந்த லெஃப்டினண்ட். படையினர் ஆச்சரியமான பார்வை பார்த்தனர்.

ஒரு வீரர் ஓடி வந்து “ஸாப்ஜி! என்னிடம் கொடுங்கள் பெட்டியை” என்றார். “மஹிந்தர்! உன் வேலையைப் பார். போ!” என்றார் மேஜர் ஜெனரல்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

இவர் ஏதோ ஒரு ஆபீஸர் போல என்று எண்ணிய அந்த லெஃப்டினண்ட் “ஸார்! நீங்கள் இங்கே என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.

லெஃப்டினண்டின் வீட்டின் முன் பெட்டியை வைத்த மேஜர் ஜெனரல் “நான் இங்கே புதிதாக வரும் ஆபீஸர்களுக்கு உதவி செய்கிறேன். மீதமிருக்கும் நேரத்தில் இந்த இன்ஃபேண்ட்ரி டிவிஷனை கமாண்ட் செய்கிறேன்.” என்றார்.

வியர்த்து நடுங்கிவிட்டார் லெஃப்டினண்ட்.

“ஸார்! நான்… அது வந்து… வேணும்னு செய்யலை ஸார். நீங்க யாருன்னு தெரியல ஸார். ஐயாம் ஸாரி ஸார். மன்னிச்சிடுங்க ஸார்.” என்று உளறலுடன் மன்னிப்பு கேட்டார்.

அவரைத் தோளில் தட்டிக் கொடுத்து, அதற்குள் தான் கொண்டு வரச்சொன்ன தேநீரை அவருக்கும் கொடுத்துவிட்டு “நீ ஆபீசராக இருக்கலாம். ஆனால் உன்னால் முடிந்தவரை உன் வேலைகளை நீயே செய்ய வேண்டும். யுத்த காலத்தில் நான் ஆபீசர், அவன் சோல்ஜர் என்ற பேச்சு சரியாக இருக்காது. நீயும் நானும் அவனும் நாட்டுக்காக வேலை செய்யாத்தான் வந்திருக்கிறோம். தேவையான இடங்களில் மட்டும் அதிகாரத்தைக் காட்டு.” என்றார்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

பிறகு அந்த லெஃப்டினண்டிடம் கை குலுக்கி “ஐயாம் ஸாம். மேஜர் ஜெனரல் ஸாம் மானெக்‌ஷா. என்ன உதவி என்றாலும், பிரச்சனை என்றாலும், எப்போதும் என்னிடம் நீ வரலாம்.” என்றார்.

பின்னாளில் ராணுவத் தலைமைத் தளபதியாக உயர்ந்து தேசத்தின் ராணுவப் படைகளுக்கு ஃபீல்ட் மார்ஷலாக உயர்ந்த மானெக்‌ஷா அவர்களின் பிறந்தநாள் இன்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories