மனிதர்களால் இயற்கை அழிந்து வருகிறது : ஐ.நா அறிக்கை!

earth destroying - 2026

மனிதர்கள் ஏற்படுத்தியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் பல உயிரினங்கள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா.தெரிவித்துள்ளது.

மனிதர்கள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளால் இயற்கை இதுவரை இல்லாத வகையில் மோசமாக பாதிப்படைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள 1800 பக்க அறிக்கையில், சுற்றுச்சூழல் மற்றும் அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க, மனிதர்களின் நடத்தையை மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க உலக நாடுகள் முன்வரவேண்டும் என்று கூறியுள்ள ஐநாவின் அறிக்கை, மனிதர்கள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை புறந்தள்ளிவிட முடியாது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

அரசாங்கங்களின் சிறப்பான கொள்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில்நுட்பத்தை கடைபிடித்தால் அழிவின் பாதிப்பில் இருந்து இயற்கையை காபாற்றும் வழிகளாகவும் கூறப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, மனிதர்கள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளால் 10 லட்சம் விலங்குகள், மரங்கள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காடுகள் அழித்தல், பருவநிலை மாற்றத்தை அனுமதித்தல், அதிகளவில் மீன்பிடித்தல், நிலப்பரப்பையும் நீரையும் மாசாக்குவது, ஆகியவை சுற்றுச்சூழல் அழிவு நிலையை நோக்கி செல்வதற்கான முக்கிய காரணிகளாக ஐநா சுட்டிக்காட்டியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 80 கோடி கிலோ உலோகங்கள், நச்சு கழிவுகள் உள்ளிட்டவை கடல், ஆறு போன்ற நீர்நிலைகளில் கலப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக, பவளப் பாறைகள் அழிவை குறிப்பிட்டுள்ள ஐநா, தற்போதைய சூழலில் வெயில் 1 டிகிரி உயர்ந்தால் கடல்பாசிகள் மற்றும் பவள பாறைகள் 90 விழுக்காடு பாதிக்கப்படையும் என்றும் ஒரு டிகிரிக்கு மேல் உயர்ந்தால் பவள பாறைகள் 99 விழுக்காடு காணாமல் போகும் சூழல் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது

கடல் வளத்தை அழிக்கும் முக்கிய காரணியாக மீன்பிடித்தொழிலை சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா., உலகில் உள்ள கடல்களின் 55 சதவிகித பகுதிகளில் மீன்பிடி கப்பல்கள் இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதுவரை மீன்கள் மற்றும் சுறாக்கள் 3-ல் ஒரு பங்கு அழிக்கப்பட்டுள்ளதாக இயற்கை பாதுகாப்பு அமைப்பு கணக்கிட்டுள்ளது.

உணவு வீணாவதை தடுத்தல், தற்போதைய அவசர, அவசியம் என்று கூறியுள்ள ஐநா, சாலை விரிவாக்கம் செய்வதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories