தேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா!

Published:

madurai thenur sundaravalli temple - 2026
#image_title

மதுரை, சோழவந்தான் அருகே, தேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோவில், புரட்டாசி பொங்கல் திருவிழா, சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு, சுந்தரவள்ளி அம்மன், சிறிய கோவிலில் இருந்து, பெரிய கோவிலுக்கு வந்து சேர்ந்தார். அங்கு, பக்தர்கள், பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து, அக்னிச்சட்டி, எடுத்து வந்தார்கள்.

மறுநாள் காலை, அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, ஏழு கரககாரர்கள் முன்னிலையில், சக்தி கிரகம் எடுத்து, முளைப்பாரி ஊர்வலம், வீதியுலா நடைபெற்றது. வழிநெடுக, அம்மனுக்கு பூஜைகள் செய்து, அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கினார்கள்.

பக்தர்கள், நேர்த்திக்கடனுக்காக, சேத்தாண்டி வேஷம், மற்றும் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, அம்மன் உடன் வந்தார்கள். இரவு, அம்மன், பூப்பல்லக்கில் எழுந்தருளி, விடிய விடிய பவனி வந்து, அதிகாலை சிறிய கோவிலுக்கு வந்து சேர்ந்தார்.

இந்த விழா ஏற்பாடுகளை, கிராமப் பொதுமக்கள் செய்திருந்தார்கள். சமயநல்லூர் போலீசார், பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவாகச் செய்திருந்தார்கள்.

வீடியோ செய்தி:

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Related articles

Recent articles

spot_img