நெல்லை மாவட்டம் சுரண்டையில் காமராஜர் பிறந்தநாள் விழா, மருத்துவ முகாம் உள்ளிட்ட முப்பெரும் விழாவில், தமிழக தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கீழடியில் 3 கட்ட ஆய்வுகளில் 2 ஆய்வுகளில் பல்வேறு பழங்கால பொருட்கள் கிடைத்தன. 3 வது ஆய்வில் எதுவும் கிடைக்க வில்லை. 4 வது கட்ட ஆய்வில் 13,800 பொருட்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து 5வது கட்ட ஆய்வுக்கு அனுமதி கேட்டுள்ளோம்.
மதுரையில் நடைபெறும் பழங்கால பன்னாட்டு தமிழர் கண்காட்சியில் கீழடியில் கிடைக்கப் பெற்றுள்ள அரிய வகை பொருட்கள் இடம்பெறச் செய்யவுள்ளோம். அதன்பின் 4 இடங்களில் அருங்காட்சியகம் மேம்படுத்தும் பணிகள் தொடங்கபபட உள்ளன.
8 கோடி ரூபாய் செலவில் தேனி, திருவண்ணாமலை பகுதிகளில் 2 அருங்காட்சியகம் தொடங்கப்பட உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
அவருடன் சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன் தாஸ் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.