பசும்பொன்னில் அதிமுக., பேனர்கள் கிழிப்பு: டிடிவி தினகரன் மற்றும் ஆதரவாளர்கள் மீது போலீஸில் புகார்

Published:

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111வது ஜெயந்தியை விழாவை முன்னிட்டு வழி நெடுகிலும் அரசியல் கட்சிகளின் வாழ்த்து பேனர்கள் வைக்கப் பட்டிருந்தன.

மற்ற அரசியல் கட்சியினர் போலவே… தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள். அவர்கள், தினகரன் முன்னிலையிலேயே அதிமுக., பேனர்களைக் கிழித்து எறிந்தனர். கைகளில் வைத்திருந்த கம்புகளால் அதிமுக., கொடிகளைக் கிழித்தனர்.

பேனர்களில் இவர்கள் கிழித்தது அதிமுக., அமைச்சர்களின் படங்களை மட்டுமல்ல… உடன் ஜெயலலிதாவின் படங்களையும்தான்…! பசும்பொன் தேவர் திருமகனாரின் படங்களையும் சேர்த்துத்தான் கிழித்தார்கள்….! அங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் அவர்களை கயிறு கட்டி தனியாகப் பிரித்து, அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் அனுப்பி வைத்தனர்

இந்நிலையில், அதிமுக ப்ளக்ஸ் பேனர்கள், கொடிகள் அ.ம.மு.கவினரால் கிழிக்கப் பட்டது தொடர்பாக டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டது.

இந்நிலையில், முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையையொட்டி, வைக்கப்பட்ட அதிமுக ஃப்ளக்ஸ் பேனர்களை சேதப்படுத்தியதாக, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

கமுதி – மதுரை சாலையில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் வரை 200க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்கள், அதிமுக கட்சிக் கொடிகள் அமைக்கப் பட்டிருந்தன. நேற்று அந்த வழியாக தினகரன் வந்த போது அதிமுக ப்ளக்ஸ் பேனர்கள், கொடிகள் அ.ம.மு.கவினரால் கிழிக்கப்பட்டன.

இந்நிலையில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக, அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img