பசும்பொன்னில் அதிமுக., பேனர்கள் கிழிப்பு: டிடிவி தினகரன் மற்றும் ஆதரவாளர்கள் மீது போலீஸில் புகார்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111வது ஜெயந்தியை விழாவை முன்னிட்டு வழி நெடுகிலும் அரசியல் கட்சிகளின் வாழ்த்து பேனர்கள் வைக்கப் பட்டிருந்தன.

மற்ற அரசியல் கட்சியினர் போலவே… தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள். அவர்கள், தினகரன் முன்னிலையிலேயே அதிமுக., பேனர்களைக் கிழித்து எறிந்தனர். கைகளில் வைத்திருந்த கம்புகளால் அதிமுக., கொடிகளைக் கிழித்தனர்.

பேனர்களில் இவர்கள் கிழித்தது அதிமுக., அமைச்சர்களின் படங்களை மட்டுமல்ல… உடன் ஜெயலலிதாவின் படங்களையும்தான்…! பசும்பொன் தேவர் திருமகனாரின் படங்களையும் சேர்த்துத்தான் கிழித்தார்கள்….! அங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் அவர்களை கயிறு கட்டி தனியாகப் பிரித்து, அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் அனுப்பி வைத்தனர்

இந்நிலையில், அதிமுக ப்ளக்ஸ் பேனர்கள், கொடிகள் அ.ம.மு.கவினரால் கிழிக்கப் பட்டது தொடர்பாக டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டது.

இந்நிலையில், முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையையொட்டி, வைக்கப்பட்ட அதிமுக ஃப்ளக்ஸ் பேனர்களை சேதப்படுத்தியதாக, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

கமுதி – மதுரை சாலையில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் வரை 200க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்கள், அதிமுக கட்சிக் கொடிகள் அமைக்கப் பட்டிருந்தன. நேற்று அந்த வழியாக தினகரன் வந்த போது அதிமுக ப்ளக்ஸ் பேனர்கள், கொடிகள் அ.ம.மு.கவினரால் கிழிக்கப்பட்டன.

இந்நிலையில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக, அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories