இன்று “முத்தன்ன வெண்ணகையாய்” என்று தொடங்கும் திருவெம்பாவையின் மூன்றாவது பனுவலை காண இருக்கிறோம்.
இந்த பாடலையும் மாணிக்கவாசகர் உரையாடல் போல் அமைத்துள்ளார். ஒரு தோழி உறங்கும் இன்னொரு தோழியை குறித்து “அத்தன் ஆனந்தன் அமுதன்” என்று அந்த ஈசனை இடைவிடாது ஓதுவாய். அவன் பெருமை பேசுவாய் இப்ப என்னெ ஆயிற்று உனக்கு? இவ்வளவு தான் உன் பக்தியா? என்று கூறி எழுப்புகிறாள். கூடவே, நம்மையும் மாணிக்கவாசகர் உறக்கத்திலிருந்து எழுப்பி இறைவனை துதித்து பாட அழைக்கிறார்.
வாருங்கள் இப்பாடலில் முழுப்பொருளையும் அறிந்து நாமும் அந்த ஈசனை துதித்து வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறுவோம்!


